ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையிலிருந்த ஆறு பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற உத்தரவை சிபிஐஎம்எல் வரவேற்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஆறுபேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 17ல் இதே வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்த பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து, அதே அடிப்படையில் ஆறு பேர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.