தலையங்கம்

காவிப் பாசிச பாஜக அரசு, தமிழ்நாட்டில் எப்படியாவது காவிக் கொடியைப் பறக்கவிட்டிட வேண்டும் என பல திட்டங்களைத் தீட்டி வருகிறது தெரிந்த ஒன்றுதான். அப்படி பாசிச பாஜக கொண்டு வரும் திட்டங்களையெல்லாம் முறியடிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அதன் வழியிலேயே தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசும் பின் தொடர்ந்து செல்வதானது தமிழ்நாட்டு மக்களை, தங்களுக்கு வாக்களித்து அரியணையில் உட்கார வைத்த மக்களைத் தண்டிக்கும் செயல் ஆகிவிடாதா? பாஜகவின் தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.