ராகுல் காந்தி பதவி பறிப்பு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

அரசியல் குற்றமயமாக்கல் என்பது இந்தியா வில் ஆழ்ந்த கவலை அளிக்கும் விசயமாக இருந்து வருகிறது. அது ஜனநாயகத்தில் நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவிப்பதாகவுள்ளது. அப்படியிருக்கையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் சிலவகை குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி பறிப்பை கட்டாயமாக்கியது. அவர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடுவதையும் அந்த சட்டம் தடுக்கிறது.