வேர்களிடம் செல்வோம்! வேரூன்றுவோம்!

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை கூர்மைப் படுத்திட வேண்டுமானால், கட்சிக் கிளைகளை, ஊராட்சிக் (உள்ளூர்) கமிட்டிகளை பலப்படுத்திட வேண்டும் என கட்சி மத்திய கமிட்டி அறைகூவல் அறைகூவல் விடுத்து இருக்கிறது. மே 25, நக்சல்பாரி நினைவு நாள் முதல் ஜூலை 28 வரை அதை சடங்குத் தனமாக அல்ல. ஒரு பெரும் இயக்கமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறது. ஜூலை 28, தியாகிகள் நினைவு நாளன்று அனைத்து கிளைகளும், கிளை உறுப்பினர்களும் கூடி, பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திட, கட்சிக் கிளைகளை வலுப்படுத்திட சபதம் ஏற்றிட வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.