தேர்தல் பத்திரத் திட்டம் ஜனநாயக விரோதமானது - உச்ச நீதிமன்றம்

பாஜக அரசாங்கத்தின் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானதெனக் கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பை இகக(மாலெ) விடுதலை வரவேற்கிறது. தேர்தல் பத்திரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஜனநாயக விரோதமானவையும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானவையும் ஆகும். அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமான இந்தத் தேர்தல் பத்திர திட்டம் மூலமாக நடைபெற்ற கார்ப்பரேட்டுகளின் நிதியளிப்புகள் குறித்த விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அரைகுறையான, கைவிடப்பட்ட சிங்கூர் திட்டத்திற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு என்பது மேற்கு வங்க மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அநீதி

சிங்கூரில் அரைகுறையான, கைவிடப்பட்ட நானோ தொழிற்சாலைத் திட்டத்திற்காக இழப்பீடு கோரிய வழக்கில், செப்டம்பர் 1, 2016 முதல் மீட்புக் காலம் வரை ஆண்டுக்கு 11% வட்டியுடன் ரூ. 765.68 கோடி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்க மூன்று பேர் கொண்ட நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தப் பணத்தை மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கழகம் (WBIDC) கொடுக்க வேண்டும்.