தோழர் அரூப் சென்குப்தா அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலி

தோழர். தினாஜி எனப்படும் அருப் சென்குப்தா நேற்று இரவு (15.5.22 இரவு 11.45 மணியளவில்) கொல்கத்தாவில் உள்ள நைட்டிங்கேல் நர்சிங் ஹோமில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். நீண்ட காலமாக சிறுநீரக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். 77 வயதான அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தோழர். தினாஜி பீகார் மாநில போஜ்பூர் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட கட்சி செயலாளர் ஆவார். தோழர் 1980 களில் பீகாரில் நடந்த அனைத்து நிலப்பிரபுத்துவ தாக்குதல்கள் மற்றும் சுரண்டல்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் புகழ்பெற்ற அமைப்பாளராக தினாஜி திகழ்ந்தார். தோழர். வினோத் மிஸ்ரா தலைமையில் சீனாவுக்கான கட்சிக் குழுவின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

அவரது உடல் இன்று காலை மேற்கு வங்க மாநில கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர். கார்த்திக் பால், மற்றும்

தோழர்.பார்த்தா கோஷ், அபிஜித், ஜெயது, பாசு, அதானு மற்றும் பிற மாநிலக் குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தோழருக்கு செவ்வஞ்சலி!