தூய்மை பணியாளர்களின் வேலை, கூலி, . கௌரவம், அவுட்சோர்சிங் முறையை ஒழித்து கட்டுதல், அனைவரையும் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் போராட் டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 12 அன்று தமிழ்நாட்டில் கோவையில் டாடாபாத், சிவா னந்தா காலனி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்திற்கு சந்தானம் தலைமை தாங்கினார். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் பாலசுப்பிர மணியன், வெங்கடாசலம், பெரோஸ் பாபு, சங்கர் கண்டன உரையாற்றினார்கள். ஓட்டுநர் சங்க தலைவர் மருதமணி, பொருளாளர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுரேஷ் நன்றி கூறினார். தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சங்கர பாண்டியன் துவக்கிவைத்துப் பேசினார். முத்து கிருஷ்ணன், தமிழரசி, கனகராஜ், முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.