மோடியின் தமிழ்நாடு வருகை!

"திரும்பிப்போ மோடி" ட்விட்டர் இயக்கத்தால் மோடியை, பாஜகவை பீதியடையச் செய்த தமிழ்நாடு, "வருக மோடி, வணக்கம் மோடி" என்று ட்விட்டர் இயக்கம் நடத்தி திருச்சி வந்த மோடியை வரவேற்றுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடு மகிழ்ச்சி தெரிவிக்கிறது. "வணக்கம் மோடி" ஹாஷ்டேக் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுட்டுரை களைப் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டி பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழ்நாடு மக்களை பாராட்டி மகிழ்ந்துள்ளதையும் அந்த ஏடு செய்தியாக்கி உள்ளது.

ஜெர்மன் நாஜிசமும் சங் பரிவார பாசிசமும்

பல்வேறு நாடுகளிலுமுள்ள பாசிசங்கள் அனைத்தும் ஜெர்மானிய நாஜிசத்தைத் தம் முன்மாதியாகக் கொண்டிருந்தாலும் அதன் முழு அச்சு வார்ப்பாக இந்திய பாசிசம் மட்டுமே இருப்பதாகக் கருதலாம்.

அவற்றின் ஒத்த தன்மைகளை இங்கு பார்ப்போம்:

சிபிஐ எம்எல் கட்சி அறைகூவல்!

இந்த நாடே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. "இந்து ராஷ்ட்ரா" உருவாக்கும் கனவுகளில் சங்கி பரிவாரங்கள் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் புகைப்புட்டிகள்

டிசம்பர் 13, 2001 அன்று இந்திய நாடாளு மன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்கு தலின் இருபத்திரண்டாவது நினைவு நாளில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிர்ச்சி தரும் புகை பீதிக்கு சாட்சியமாகியது. சாகர் சர்மா என அடையாளம் காணப்பட்ட லக்னோ இளைஞர் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரென குதித்து, மேஜைகள் மீது தாவிச்சென்று மஞ்சள் புகையை வெளியேற்றும் புட்டியைத் திறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைக்கும் முன்பு, ஜீரோ நேரம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இதனைத் செய்தார். சாகருடன் மைசூரின் மனோரஞ்சன் என்ற கூட்டாளியும் இருந்தார்.

ஈபி, ஈடியின் அரசாட்சியும் இந்திய தேர்தல் ஜனநாயகத்தை மேலும் மேலும் கேலிக்கூத்தாக்குவதும்

மோடி அரசாங்கத்திற்கு ஈபியும் (தேர்தல் பத்திரங்கள்), ஈடியும் (அமலாக்க இயக்குனரகம்) அதிகாரத்திற்கான இரண்டு மிகப்பெரிய ஊற்றாக வெளிப்பட்டுள்ளன. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களில் உண்மையிலேயே ஈடிதான் பாஜகவிற்கான நட்சத்திர பரப்புரையாளராக மாறியுள்ளது. ஈடியின் இருத்தல் நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் என்ன செய்திருக்கிறதென்றால் தனது எதிர்ப்பாளர்களை இலக்காக்க அதனை ஆயுதமாக்கி யிருக்கிறது. கார்ப்பரேட்டு களிடமிருந்து கட்டுப் பாடற்ற, கணக்கில் வராத நிதி பெறுதலை எளிதாக்க, தேர்தல் பத்திரங்களை மோடி அரசாங்கம் தான் உருவாக்கியது; அறிமுகப்படுத்தியது.

ஐந்தாவது பெரிய பொருளாதாரம், உலகப் பசிக் குறியீட்டில் 125 நாடுகளின் பட்டியலில் 111 வது இடத்திலுள்ளது

இஸ்ரேலின் இடைவிடாத குண்டு வீச்சாலும் அத்தியாவசியப் பொருட்களின் கொடூரத் தடையாலும் நிகழ்த்தப்படும் ஒரு இன அழிப்பு தொடர் தாக்குதலை, காஸாவின் கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள் எதிர் கொள்கிற போது, உலக பசிக் குறியீடு 2023 உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பசியின் வேதனை நோக்கி, நமது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆழமாக உட்பொதிந்துள்ள சமூகபொருளாதார காரணிகள், துரிதமாக மோசமாகி காலநிலை நெருக்கடி ஆகியவற்றோடு கோவிட் வரும் பெருந்தொற்று, ரஷ்ய உக்ரைன் போர் போன்ற சமீபத்திய நிகழ்வுப் போக்குகளின் சேர்க்கையே அச்சுறுத்தும் உலக பசி காட்சிகளுக்கு காரணம் என உபகு 2023 நம்புகிறது.

அதிகாரத்தின் முன், நேருக்கு நேராக உண்மையைப் பேசுவது இதழியல் நெறிதானே தவிர பயங்கரவாதம் அல்ல!

அக்டோபர் 3, விடிகாலையில் நியூஸ் கிளிக் இணையதள ஏட்டோடு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இதழியலாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் (ரெய்டுகள்) இந்தியாவிலுள்ள விமர்சனபூர்வமான ஊடகக் குரல்களின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும். டெல்லியின் பல இடங்களில் நடந்த சோதனைக ளுக்கு முன்னால், தெலுங்கானாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதும், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் அதே போல சோதனைகள் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) நடத்தப்பட்டிருக்கிறது.

வருணாசிரம முறைக்கு வலு சேர்க்கும் விஸ்வகர்மாத் திட்டம்

ஜூன் 1953. அன்றைய காங்கிரசின் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் திரு. ராஜாஜி அவர்கள் ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். "மாற்றப்பட்ட திட்ட அடிப்படையிலான ஆரம்பக் கல்வி" என்ற பெயரில் அறிவித்தார். அதன்படி, காலை நேரம் முறையான வகுப்பறைக் கல்விக்காகவும் மதிய நேரம் மாணவர்கள் தங்கள் தந்தையரின் பாரம்பரியமான குலத் தொழிலைக் கற்றுக் கொள்வதற்கும் என ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி, தோட்டியின் மகன் தோட்டி வேலையைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். செருப்பு தைப்பவரின் மகன் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். பூசாரியின் மகன் பூசாரியின் தொழிலைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

விவாதத்தை தடம்மாற்றி மக்களை பிளவுபடுத்தத் துடிக்கும் சங்கிப் படையின் முயற்சிகளை முறியடிப்போம்.

பரந்த அடிப்படையிலான ஒன்றுபட்ட எதிரணி ஒன்று உருவாகியதிலிருந்து, மோடி அரசாங்கமும் ஒட்டுமொத்த சங்கி- பாஜக படையணியும் கலக்கமடைந்துள்ளனர் என நன்றாகவே புலப்படுகிறது. புல்வாமா படுகொலையால் தூண்டிவிடப்பட்ட மிகை தேசியவாத அலையின் பின்னணியில், 2019இல் நடைபெற்ற தேர்தலில் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைந்த வாக்குகள் 45%ஐத் தாண்டவில்லை என்பதும், பாஜகவின் சொந்த வாக்குகள் 40%க்கும் குறைவாகவே இருந்தது என்பதும் அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' ஏன் இந்த அதீத விரக்தி?

தற்போது 'இந்தியா' என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொள்ள அதன் பிரதிநிதிகள் மும்பையில் கூடியிருந்த சமயத்தில், மோடி அரசாங்கம் செப்டம்பர் 18 முதல் வரை 22 நாடாளுமன்றத்தின் வழக்கத்திற்கு மாறான ஒரு கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது.