மணப்பாறை ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

22.3.2022 அன்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அயர்லா நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டு முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. அமிர்தவள்ளி  அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அயர்லாவின் மாவட்ட அமைப்பாளர் தோழர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஞானதேசிகன், மணப்பாறை ஒன்றிய செயலாளர் தோழர் ஆவா. இளையராஜா, வையம்பட்டி ஒன்றிய செயலாளர் தோழர். அருள் குணசேவியர், புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலு, நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர் சங்க தோழர். சக்திவேல், இகக(மாலெ) மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் மாசிலாமணி, தோழர் ராமாயி, தோழர் தனலட்சுமி, தோழர் மெக்கானிக் இளையராஜா ஆகியோர் உரையாற்றினர்.