காலங்கள் மாறும்! சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தே தீரும்!

மோடி அரசாங்கம் கலங்கிப் போயிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று வழங்கிய தீர்ப்பினால் மோடி அரசாங்கம் கிடுகிடுத்துப் போயுள்ளது. நன்கொடை வழங்கியவர்கள், பெற்றவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தலைமை நீதிபதிக்கு தொல்லை கொடுக்கவும், நீதித்துறையை மிரட்டவும் பாஜகவோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இந்த வழக்கறிஞர் குழுவினரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை மோடி அங்கீகரித்துள்ளார்.

2024 மே நாள் அறைகூவல்!

2024 மே நாள் அறைகூவல்!

இந்தியாவில் நடைபெற்று வரும் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலினூடே இந்திய தொழிலாளி வர்க்கம் 2024 மே நாளை அனுசரிக்கிறது. சர்வதேச அரங்கில் ஏகாதிபத்திய போர்கள் தொடர்கின்றன. இஸ்ரேல் காசாவில் குழந்தைகள், மருத்துவ உதவிக் குழுக்கள் மீது கூட குண்டு வீசி தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது ஈரானும் யுத்த களத்தில் இறங்கியிருக்கிறது. ரஷ்ய உக்ரைன் போரும் முடிவில்லாமல் தொடர்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியத் தொழிலாளர்கள் ரஷ்ய ராணுவத்தால் ஈடுபடுத்தப்படுகின்றர்.யுத்த களத்தில் இருக்கும் இஸ்ரேலுக்கு இந்திய அரசே கட்டுமானத் தொழிலாளர்களை ஒப்பந்தம் போட்டு அனுப்பி வைக்கிறது.

சிபிஐ (எம்எல்) (விடுதலை) தேர்தல் பரப்புரை இயக்கம்

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஐஎம்எல் கட்சி, இந்தியா கூட்டணியின் அங்கமாக பீகாரில் 3 தொகுதிகளும் ஜார்க்கண்டில் ஒரு தொகுதியும் மட்டுமே போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி வடிவம் பெறாத மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் ஒவ்வொரு தொகுதியில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதற்காக சோம்பி இருக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செயலூக்கமிக்க பரப்புரை இயக்கத்தை சுதந்திரமாக மேற்கொண்டது.

சிபிஐஎம்எல் தேர்தல் நிதிக்கு நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்!

பல ஆண்டுகளாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டமும், அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பல கட்சி ஜனநாயகமும் கூட்டாட்சி கட்டமைப்பும் என்றென்றைக்குமானது என நம்பிக் கொண்டிருந்தோம். நாம் இனியும் அவ்வாறு நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதை 2024 தேர்தல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இந்தியாவை ஒரு கட்சி மட்டுமே ஆளுகின்ற ஆட்சி முறைக்கு மாற்றிட மோடி அரசாங்கம் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. பதவியில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் உட்பட, இரண்டு முதலமைச்சர்கள் தேர்தல் காலத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் மீது மோடி தொடுக்கும் பத்தாண்டு காலப் போர்!

மோடியின் பேரழிவுவாத நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலனிலிருந்து தான் என சொல்லப்படுகிறது. தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்காகத்தான் தேர்தல் பத்திரம், விவசாயிகளின் நலனில் இருந்து தான் வேளாண் சட்டங்கள், காஷ்மீர் மக்களின் நலன் காக்கத் தான் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நலனில் இருந்து தான் புதிய குற்றவியல் சட்டங்கள், பெண்கள் நலனிலிருந்து தான் பொது சிவில் சட்டம், தொழிலாளர்களை பாதுகாக்கத் தான் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் என்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக பெற்ற, அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக பெற்ற மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருகிறார்கள்.

மோடி அரசு வீழ, மக்கள் வாழ நாடு தழுவிய வேலை நிறுத்தம்! கிராமப்புற முழு அடைப்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!

தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறு!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்காதே!

நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தாதே!

அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 உத்தரவாதம் செய்!

விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்!

போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தை உதாசீனப்படுத்திய திமுக அரசு!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிமுக, திமுக ஆட்சிகள் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த 2023 டிசம்பர் 19 அன்று ஆளுங்கட்சியின் தொமுச தவிர்த்து மற்ற அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கின.