தலையங்கம்

ஆர்எஸ்எஸ் அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்த அனுமதி கோரியது. அன்றைய நாளில் சமூகநீதி மனிதச் சங்கிலிக்கும் அனுமதி கோரப்பட்டது. எனவே யாருக்கும் அனுமதி இல்லை என்று தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. அக்டோபர் 11 அன்று சமூகநீதிக்கான மனிதச் சங்கிலி எவ்விதப் பிரச்சனையும் இன்று நடந்து முடிந்தது. ஆனால், ஆர்எஸ்எஸ் 60 இடங்களில் தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்த நீதிமன்றம் மூலம் அனுமதி கோரியுள்ளது. இந்தப் பேரணியின் மூலம் பெரும் கலவரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

இந்தியாவின் நீதித்துறை ஒரு 'நிர்வாக நீதிமன்றமாக' சுருக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்!

செப்டம்பர் 3 ஆம் தேதி, தீஸ்தா செதால்வத் அகமதாபாத்தின் சபர்மதி சிறையில் இருந்து 68 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிணையில் விடுதலை ஆனார். 2002 குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியதால் அரசியல் ரீதியாக பழிவாங்கும் கைது நடவடிக்கைகளில் ஆர்.பி ஸ்ரீகுமாருடன் கைது செய்யப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். இவரின் முதன்மை பிணை மனு குஜராத் உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது.

நேர்காணல்: எங்கள் போராட்டம் தொடர்கிறது!

2020 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மாகாகட்பந்தன் கூட்டணியில் இகக (மாலெ), இகக, இகக (மா), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன