நெல்லையில் பாசிச பாஜக - இந்து முன்னணியால் விசிறி விடப்பட்ட சட்ட விரோத கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி; நீதிக்கான போராட்டம் வென்றது !

சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவின் வேட்பாளர் செய்த பணப்பட்டுவாடாவை அம்பலப்படுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளரும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவருமான எம்.சுந்தர்ராஜ், இக்க(மாலெ) நெல்லை பாட்டப்பத்து கிளைச் செயலாளர் பேச்சிராஜா மற்றும் சில குடும்பத்தினரையும் காவிக்கும்பல்களின் ஆதரவில் கட்டுப்பாடு என்ற பெயரில் ஊர் விலக்கம் செய்து வைத்ததற்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் இகக(மாலெ) கட்சியால் எடுக்கப்பட்டது.

மந்திரிக்கு பல்லக்குத் தூக்கும் ராஜாக்கள்

தமிழகத்தில் காலூன்றிடத் துடிக்கும் பாஜக  புதுப்புது அவதாரங்களை எடுப்பதும் புதுப்புது பிரச்சினைகளை