நாட்டின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் பாசிச பாஜக ஒன்றிய அரசின் அடியாட்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

தோழர்களே! சிபிஐஎம்எல் கட்சியின் மாநாடு வெற்றிபெற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழுவின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்கள் நாட்டின் நிலைமைகளை எல்லாம் தெளிவுபட எடுத்துக் கூறியிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி என்கிற அரசியல் கட்சி ஆர்எஸ்எஸ்ஸின் அங்கமாகச் செயல்படுகிறது. அவர்களுக்கு நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில், மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கிடையாது. மனுதர்மத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்பாக ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.