அய்சா & ஆர்ஒய்ஏ ஆர்ப்பாட்டம்

24.02.2022 அன்று சேலம் மாவட்டம் மல்லூரில் அகில இந்திய மாணவர் கழகம் மற்றும்  புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக புரட்சிகர இளைஞர் கழக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் .சுந்தர்ராஜன்  தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்திட, புதிய கல்வி கொள்கை, இல்லம் தேடி கல்வி முறையை கைவிட, மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைக ளுக்கு முடிவு கட்டிட, பள்ளி-கல்லூரிகளில் கட்டண கொள்ளை மற்றும் சாதி ரீதியான ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்திட, பெண்கள் திருமண வயது 18-லிருந்து 21-ஆக உயர்த்துவதை கைவிட வலியுறுத்தியும் ஹிஜாப் அணிவதற்கு  எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுதோழர் அன்பு துவக்கவுரை நிகழ்த்தினார்இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பழ.ஆசைத்தம்பிஅகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் .பால அமுதன் கண்டன உரையாற்றிகார்கள். அய்சா சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் . பிரித்வி, ஆர்ஓய்ஏ சேலம் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜெயராமன் உட்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.