காலங்கள் மாறும்! சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தே தீரும்!

மோடி அரசாங்கம் கலங்கிப் போயிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று வழங்கிய தீர்ப்பினால் மோடி அரசாங்கம் கிடுகிடுத்துப் போயுள்ளது. நன்கொடை வழங்கியவர்கள், பெற்றவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தலைமை நீதிபதிக்கு தொல்லை கொடுக்கவும், நீதித்துறையை மிரட்டவும் பாஜகவோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இந்த வழக்கறிஞர் குழுவினரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை மோடி அங்கீகரித்துள்ளார்.

2024 மே நாள் அறைகூவல்!

2024 மே நாள் அறைகூவல்!

இந்தியாவில் நடைபெற்று வரும் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலினூடே இந்திய தொழிலாளி வர்க்கம் 2024 மே நாளை அனுசரிக்கிறது. சர்வதேச அரங்கில் ஏகாதிபத்திய போர்கள் தொடர்கின்றன. இஸ்ரேல் காசாவில் குழந்தைகள், மருத்துவ உதவிக் குழுக்கள் மீது கூட குண்டு வீசி தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது ஈரானும் யுத்த களத்தில் இறங்கியிருக்கிறது. ரஷ்ய உக்ரைன் போரும் முடிவில்லாமல் தொடர்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியத் தொழிலாளர்கள் ரஷ்ய ராணுவத்தால் ஈடுபடுத்தப்படுகின்றர்.யுத்த களத்தில் இருக்கும் இஸ்ரேலுக்கு இந்திய அரசே கட்டுமானத் தொழிலாளர்களை ஒப்பந்தம் போட்டு அனுப்பி வைக்கிறது.

டெல்லி ஜே என் யூ இடதுசாரி மாணவர் வெற்றி - காவிப் பாசிசத்துக்கு சவால் விடும் வெற்றி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் (ஜேஎன்யூஎஸ்யூ) தேர்தல்களில் ஒன்றுபட்ட இடது கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அகில இந்திய மாணவர் கழகத்தின் (ஏஐஎஸ்ஏ) தோழர் தனஞ்செய் ஜேஎன்யூஎஸ்யூ மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2,598 வாக்குகள் பெற்று 922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எஸ்எஃப்ஐ யின் அபிஜித் கோஸ் துணைத் தலைவராகவும், ஒன்றுபட்ட இடது கூட்டணியின் ஆதரவுடன் பாப்சாவின் ப்ரியான்சி ஆர்யா பொதுச் செயலாளராகவும், ஏஐஎஸ்எப் இன் தோழர் சஜித் இணைச் செயலாளராகவும்  வென்றனர்.  

 

சிறுபான்மையினருக்கு, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்புச் சட்டம்?

மார்ச் 11 அன்று தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமாக தேவைப்படும் தகவல்களை வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற ஸ்டேட் பேங்கின் வேண்டுகோள் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இந்த நாடு காத்துக் கொண்டிருந்தது. ஆனால். அதே நாள், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஐ அமல்படுத்துவதற்கான விதிகளை, மிக நீண்ட காலம் கழித்து, மோடி அரசாங்கம் அறிவித்தது. இச்சட்டம் 2019 டிசம்பர் 11 அன்று நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆனால் அதற்கான விதிகளை அறிவிப்பதற்கு மோடி அரசாங்கத்திற்கு 51 மாதங்கள் ஆகி இருக்கிறது. ஏன்? ஒரே காரணம்தான். 2024 தேர்தல்.

குற்றவாளி கூண்டில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

மார்ச் 2 அன்று புதுச்சேரியில் ஒன்பது வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு மூன்று நாட்கள் கழித்து உள்ளூர் வாய்க்காலிலேயே பிணமாகக் கிடந்தது. இது, புதுச்சேரி மட்டுமின்றி, கேள்விப்பட்டோர் நெஞ்சை எல்லாம் உறைய வைக்கும் கொடூரச் சம்பவமாகும். பாஜக- என்ஆர்கே ஆட்சியின், பொருளாதார வளர்ச்சியை சீரழிக்கும் சுற்றுலா, போதைக் கலாச்சாரத்தின் கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள்

"காஸா இல்லாமல் பெண்ணிய போராட்டம் இல்லை! காஸா இல்லாமல் எதிர்காலம் இல்லை" என்ற முழக்கத்துடன் காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக உறுதி ஏற்று சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள் 2024 தொடங்கியது. காஸாவில் கொல்லப்பட்ட 30 ஆயிரம் பேர்களுள் பெண்களும் குழந்தைகளுமே அதிகம். அந்தப் பகுதியிலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருட்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவே செய்யும். முகாம்களில் உணவுப் பொருள் வழங்க பெரிய ட்ரக்குகள் வருகின்றன. பட்டினியால் தவிக்கும் மக்கள் அவற்றை நோக்கி ஓடுகிறார்கள்.

தமிழகத்தில் தொடரும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள்-படுகொடுலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டில் அதுவும் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல பட்டியலின மக்கள் படுகொடுலை செய்யப்படுகிறார்கள். தென்காசி மாவட்டம் புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை, மதுரை மாவட்டம் பெருங்குடி என தொடர்கிறது. நெல்லை மாநகரம், மணிமூர்த்தீஸ் வரத்தில் இரண்டு பட்டியலின இளைஞர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மீது சிறு நீர் கழித்து அவமானப்படுத்தினார்கள் சாதியாதிக்க வெறியர்கள்.

வாச்சாத்தி பழங்குடியினர் மீதான வன்கொடுமையும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும்

சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில், சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய ஆளுங்கட்சி கொள்ளையர் களைக் காப்பாற்ற, அப்பாவி பழங்குடியினர் பலிகடாக்கள் ஆக்கப்பட்ட, படுமோசமான வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளான கொடூரமான சம்பவம் தான் வாச்சாத்தி வன்முறை' என்பதாகும். அது பழங்குடியினப் பெண்கள், சிறுமியர் மீது பாலியியல் கூட்டுப் பலாத்கார வன்முறையை நடத்திய வனத்துறை, காவல்துறை சார் குற்றவாளிகளின் ஆணாதிக்க வெறியாட்டத்தின் சாட்சியமும் ஆகும்.

வாச்சாத்தி வன்முறை, நீதிக்கான போராட்டம் : கடந்து வந்த பாதை :

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட நூறு சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும்போது, தலைநகர் சென்னை ஆசிரியர்கள், செவிலியர்களின் போராட்டக் களமாகக் காட்சியளிக்கிறது. நவதாரளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் எந்த அரசும் தொழிலாளர்கள், ஊழியர்கள், விவசாயிகளின் போராட்டத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். நன்கு கட்டமைக்கப் பட்டத் தொழிற்சங்கங்களை கொண்டிருக்கிற ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டக் களத்துக்கு மீண்டும் மீண்டும் வருகின்றனர்.