மோடி அரசாங்கம் கலங்கிப் போயிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று வழங்கிய தீர்ப்பினால் மோடி அரசாங்கம் கிடுகிடுத்துப் போயுள்ளது. நன்கொடை வழங்கியவர்கள், பெற்றவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தலைமை நீதிபதிக்கு தொல்லை கொடுக்கவும், நீதித்துறையை மிரட்டவும் பாஜகவோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இந்த வழக்கறிஞர் குழுவினரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை மோடி அங்கீகரித்துள்ளார்.