பரந்தூர் விமான நிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம், எட்டுவழிச்சாலை, என்எல்சி சுரங்கங்கள், சிப்காட் தொழிற்சாலை வளாகங்கள் எனத் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளானது வலுவான மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில், கடந்த ஏப்ரல் 21, 2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம் 2023 Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act 2023 என்ற விவசாயிகள் விரோத, சுற்றுச்சூழல் விரோத ஆபத்தான ஒரு மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாக்கல் செய்தார்; சட்டமன்றத்தில் விவாதங்கள் இல்லாமலேயே அது சட்டமாகவும் ஆகியுள்ளது !

ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறைவான நிலங்களை, சிறப்புத் திட்டங்களுக்கு என்ற பெயரில், தொழிற்சாலைகள், வணிகம், உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்கு வழங்கலாம் . 'இத்தகைய நிலங்களை வாங்குவதில் / கையகப்படுத்துவதில் சட்டரீதியான விதிமுறைகள், ஆட்சேபணைகள் இல்லை' என்று இச் சட்டம் சொல்கிறது. இது கடந்த மூன்றாண்டு களாக மத்திய பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டு வந்த சட்டமாகும். கார்ப்பரேட் பெரு நிறுவனங்க ளுக்கு நிலங்களைத் தாரைவார்க்க, தடையின்றி அந்நிய நிறுவன முதலீடுகளைப் பெற, இத்தகைய சட்டம் வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள், சுற்றுச்சூழலை அழிக்கக் கூடிய எந்தவொரு தொழிற்சாலையையும் தங்குதடையற்ற முறையில் கொண்டு வரலாம்' என்ற முழுமையான ஒப்புதலை இந்தச் சட்டம் வழங்குகிறது.

இந்த சட்டம் அமலானால், நீர்வரத்துகள், நீர்நிலைகள் மீது அமைக்கப்படும் பல்வேறு திட்டங்களால் இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். நீர்நிலைகள் நிரந்தரமாக அழிக்கப்படும்; அப்பகுதியைச் சார்ந்த விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். தொழிற் சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வணிக வளாகங்கள், கட்டுவதற்கு நீர்நிலை நிலங்களை வாங்கும் முதலாளிகள் மற்றும் அரசாங்கம்

விருப்பம்போல நீர்நிலைகளை சேதப்படுத்தி விட்டு அந்த நிலங்களைப் பயன்படுத்தலாம். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடப்புச் சட்டங்கள் பொருத்தப் பாட்டை இழக்கும். உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரமும் பறிக்கப்படும். கிராமப்புற பகுதியில், எந்தவொரு திட்டம் / ஆலைகள் உள்ளாட்சி மன்ற அனுமதி யில்லாமலேயே நுழையும்.

தொழில் வளர்ச்சிக்காக, ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள், இயற்கை, சுற்றுச்சூழல் என எல்லாவற்றையும் இழக்கலாம் என்ற கார்ப்பரேட் மனப்பான்மையில் திமுக அரசாங்கம் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பட்டியலிடப்பட்ட சுமார் 65,000 நீர்நிலைகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது சுமார் 30,000 நீர்நிலைகள் தான் இருக்கின்றன. அவைகளும் ஆவணங்களில் உள்ள பரப்பளவுகளை இழந்துள்ளன. இப்படி காணாமல் போன நீர்நிலைகள் மீது, தொழிற் சாலைகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பெரும் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவை கட்டப்பட்டு நீர்நிலைகள் அழிக்கப்பட்டு விட்டன; நீராதாரங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. நீரோடைகள், வடிகால் கட்டமைப்புகள் அழிக்கப்பட்ட தால், காலநிலை மாற்றத்தால் உருவாகும் பெருமழை மற்றும் பெருவெள்ளங்களால் மாநகரங்கள் மிதக்கும் நிலைக்குச் சென்று விட்டன. இதனால், மாநகர மக்களின் வாழ்க்கை தொடர் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் பெருநிறுவ னங்கள் மற்றும் கார்ப்பரேட் ஆதரவு உள்கட்டுமான வசதிகளுக்காக, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை அழித்து, விவசாயிகள் மக்கள் வாழ்வாதரங்கள் சூறையாடப்படுவதை நாம் அனுமதிக்க கூடாது. 'ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினை'யாக மட்டுமே கருதி பொதுச்சமூகம் இதை எளிதாகக் கடந்து சென்று விடக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம். இது தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினையாகும். கார்ப்பரேட் திட்டங்களுக்கு தமிழ்நாட்டின் நீர்நிலைகளைத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசாங்கத்தின், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம் 2023 சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் எனக் கோருகிறோம்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை, AIKM தமிழ்நாடு