மோடி அரசு வீழ, மக்கள் வாழ நாடு தழுவிய வேலை நிறுத்தம்! கிராமப்புற முழு அடைப்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!

தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறு!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்காதே!

நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தாதே!

அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 உத்தரவாதம் செய்!

விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்!

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான சட்டம் 2023ஐ உடனே திரும்பப்பெறுக !

பரந்தூர் விமானநிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம், என்எல்சி சுரங்கங்கள், சிப்காட் தொழிற்சாலை வளாகங்கள், எட்டுவழிச் சாலை எனத் தமிழ்நாட்டில் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள், மீனவர்கள், பொது மக்கள் வலுவான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டுவரும் பின்னணியில், கடந்த ஏப்ரல் 21, 2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட "தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) என்ற சட்டம் 2023" (TamilNadu Land Consolidation (for Special Projects) Act 2023) விவசாயிகள் விரோத, சுற்றுச்சூழல் விரோத மசோதா சட்டமன்றத்த

இந்தியாவில் உள்ள விவசாயிகள் இயக்கம் உலகெங்கிலும் உள்ள மக்கள் இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது

(தஞ்சாவூரில் 11.8.23ல் நடந்த விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாட்டில், ஏஐகேஎம் மாநிலத் தலைவர் சிம்சன், மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், சிபிஐஎம்எல் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, அயர்லா மாநில நிர்வாகி வளத்தான், கன்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில ஊழியர் கூட்டமும் நடைபெற்றது. விவிமு மாநாட்டில் எஸ்கேஎம் தேசிய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர், ஏஐகேஎம் தேசிய செயலாளர் தோழர் புருசோத்தம் சர்மா அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் சுருக்கம்)


அன்பிற்கினிய தோழர்களே! விவசாயிகளே! 

கார்ப்பரேட்டுகளுக்கு நீர்நிலைகளைத் தாரைவார்க்கும் சட்டத்தை முறியடிப்போம்!

பரந்தூர் விமான நிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம், எட்டுவழிச்சாலை, என்எல்சி சுரங்கங்கள், சிப்காட் தொழிற்சாலை வளாகங்கள் எனத் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளானது வலுவான மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: வெற்று ஆரவார அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.

விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !

ஜனவரி 26, 2023 சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி


டில்லியில் ஓராண்டுக்குமேல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது
ஒன்றிய பாஜக மோடி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி SKM சார்பில், இன்று  ஜனவரி 26.1.2023 வியாழன் மாலை  5 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் இருந்து டிராக்டர் பேரணி துவங்கியது.  டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் அணிவகுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இகை(மாலெ) சார்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போர் நடத்தி மனு அளிக்கப்பட்டது.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.