அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் புதுச்சேரி மாநில 9வது மாநாடு 21.09.2023 அன்று புதுவை தமிழ் சங்கத்தில் தோழர் சரோஜா அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மல்லிகா, மீனாட்சி, சுகுணா, விசாலாட்சி, ஜெயா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநாட்டில் வேலை அறிக்கை மாநிலச் செயலாளர் விஜயா சமர்ப்பித்தார். இகக(மாலெ) புதுச்சேரி மாநிலச் செயலர் எஸ்.புருஷோத்தமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசியத் தலைவர் டாக்டர் ரத்தி ராவ் சிறப்புரையாற்றினார். இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் சோ.பாலசுப்பிரமணியன், புதுச்சேரி மாவட்டச் செயலர் முருகன், புதுச்சேரி நகரச் செயலாளர் அருள், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசிய கவுன்சில் உறுப்பினர் காந்திமதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநாட்டில் தலைவராக மல்லிகா, செயல் தலைவராக மீனாட்சி, மாநிலச் செயலாளராக விஜயா, உள்ளிட்ட 17 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டனர்.