தை 1, பொங்கல் நாளன்று சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் முரசடித்து தொடங்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியலின் சிறப்புகளை மாபெரும் விழாவாகக் கொண்டாடுவது நோக்கம் என்று அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அமைப்பாக்கிய நிகழ்ச்சி இதுவாகும். தமிழகத்தின் பல்வகை கலைகளையும் ஒருங்கிணைத்துக் காண்கின்ற வாய்ப்பு சென்னை மக்களுக்கு கிடைத்துள்ளது.