• வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் வீட்டு மனையும் அரசு நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் இலவச பட்டா வழங்கிடவும்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நகர்ப்புற பகுதிகளிலும் உடனடியாக விரிவுபடுத்தி 100 நாள் பணியை 200 நாளாக உயர்த்தி தினக்கூலி ரூபாய் 500 வழங்கிடவும்
  • பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 1000  நிர்ணயம் செய்திடவும்
  • சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்யவும்.
  • பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்&லெனினிஸ்ட்) விடுதலை திண்டுக்கல் மாநகரக் கமிட்டி சார்பில் 21.4.22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் தோழர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில செயலாளர் தோழர் என்.கே. நடராஜன், தோழர் முருகேசன், தோழர் இரா.இரவி, தோழர் ரவிக்குமார், தோழர் ஜெகதீஸ்குமார், தோழர் ஜேசுராஜ் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.