காலங்கள் மாறும்! சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தே தீரும்!

மோடி அரசாங்கம் கலங்கிப் போயிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று வழங்கிய தீர்ப்பினால் மோடி அரசாங்கம் கிடுகிடுத்துப் போயுள்ளது. நன்கொடை வழங்கியவர்கள், பெற்றவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தலைமை நீதிபதிக்கு தொல்லை கொடுக்கவும், நீதித்துறையை மிரட்டவும் பாஜகவோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இந்த வழக்கறிஞர் குழுவினரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை மோடி அங்கீகரித்துள்ளார்.

மார்க்ஸிய கலைச்சொற்கள் , தோழர் எஸ்.வி.ஆருடன் ஓர் நேர்காணல்

[தோழர் எஸ்.வி.ஆருடன் நடந்த மிகநீண்ட உரையாடலின் ஒரு பகுதி மட்டும்]

மார்க்சியம் கற்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் மார்க்சியத்தை விமர்சிப்பவர்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் வெல்ல முடியும். அவர்களின் கேள்விகள் மூலமாக நமது மார்க்சியக் கண்ணோட்டத்தை செழுமைப்படுத்த முடியும். 

பாட்டாளி வர்க்கம் எனும் சொல்லாடல்

சிபிஐ (எம்எல்) (விடுதலை) தேர்தல் பரப்புரை இயக்கம்

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஐஎம்எல் கட்சி, இந்தியா கூட்டணியின் அங்கமாக பீகாரில் 3 தொகுதிகளும் ஜார்க்கண்டில் ஒரு தொகுதியும் மட்டுமே போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி வடிவம் பெறாத மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் ஒவ்வொரு தொகுதியில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதற்காக சோம்பி இருக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செயலூக்கமிக்க பரப்புரை இயக்கத்தை சுதந்திரமாக மேற்கொண்டது.

மக்களவைக்கு ‘இந்தியா’ கூட்டணி சார்பாகப் போட்டியிடும் சிபிஐஎம்எல் வேட்பாளர்கள்

இந்தியா கூட்டணியில், பீகார் மாநிலத்தில் அர்ரா, காராக்கட், நலந்தா; ஜார்கண்ட் மாநிலத்தில் கோடர்மா மக்களவைத் தொகுதிகளிலும் பீகார் மாநிலம்

அகியோன் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் சிபிஐஎம்எல் கட்சி

வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

1) காராக்கட் : 

தோழர் ராஜாராம் சிங்

சிபிஐஎம்எல் தேர்தல் நிதிக்கு நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்!

பல ஆண்டுகளாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டமும், அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பல கட்சி ஜனநாயகமும் கூட்டாட்சி கட்டமைப்பும் என்றென்றைக்குமானது என நம்பிக் கொண்டிருந்தோம். நாம் இனியும் அவ்வாறு நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதை 2024 தேர்தல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இந்தியாவை ஒரு கட்சி மட்டுமே ஆளுகின்ற ஆட்சி முறைக்கு மாற்றிட மோடி அரசாங்கம் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. பதவியில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் உட்பட, இரண்டு முதலமைச்சர்கள் தேர்தல் காலத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பூலேவையும் அம்பேத்கரையும் நினைவு கூர்வோம்!

சமூக சமத்துவத்திற்காக நடைபெற்ற போராட்டத்தில் பங்கு பெற்ற இந்தியாவின் மிகச்சிறந்த இருவரின் பிறந்த நாட்கள் ஏப்ரல் 11 ம் 14 ம் ஆகும். ஒருவர் ஜோதிராவ் பூலே, மற்றொருவர் பாபாசாகேப் அம்பேத்கர். பூலேவின் 197 வது (11 ஏப்ரல் 1827 - 28 நவம்பர் 1890) பிறந்தநாளையும், டாக்டர் அம்பேத்கரின் 133 வது (14 ஏப்ரல் 1891 - 6 டிசம்பர் 1956) பிறந்த நாளையும் இந்த ஆண்டில் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நவீன இந்தியாவில் இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட அடிப்படைகள் மிகக்கொடும் தாக்குதலை எதிர்கொண்டு வருவதைக் காண்கிறோம். நிலப்பரப்புத்துவ விழுமியங்கள், ஆணாதிக்கத் தளைகள் மீண்டும் தலைதூக்கி வருவதைக் காண்கிறோம்.

மோடியின் தேர்தல் அறிக்கை – ஏமாற்று வாய்ச்சவடால்கள், உண்மையான அச்சுறுத்தல்கள்

ஏழு கட்டங்களாக, நீண்ட காலம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களின் முதல் கட்டம் ஏப்ரல் 19 ல் தொடங்கும் நிலையில், அய்ந்து நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 14 அன்று, பாஜக தனது 76 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அது மோடி ஆட்சியின் தவறுகள், தோல்விகள் பற்றியோ, 2014 முதல் அள்ளி வீசிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றுக்கும் இழைத்த துரோகங்கள் பற்றியோ பேசவில்லை. சாதாரண பொதுமக்களின் தலையாய பிரச்சனைகளில் முக்கியமானவை எதைப் பற்றியும் பேசவில்லை. மாறாக, 2047ல் இந்தியா எனும் ஒரு கனவுச் சித்திரத்தை வரைகிறது.

தோழர் சசி யாதவ் - பீகார் மாநில சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு!

இககமாலெ கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும் அகில இந்திய திட்டப் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான தோழர் சசி யாதவ், சிபிஐ எம்எல் அங்கம் வகிக்கும் பீகார் மகா கூட்டணியின் இதர வேட்பாளர்களுடன் பீகாரின் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

சர்வாதிகார மோடி ஆட்சியைத் தோற்கடிப்போம்!

2013 இல் 'பிரதம மந்திரியாக மோடி' என்ற பரப்புரை தொடங்கப்பட்டது. அன்று முதல், மோடி வழிபாடு என்பதை மையமாகக் கொண்டு மாபெரும் பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான பணபலம் என்பது மோடி வழிமுறையின் தேர்தல் முத்திரையாக இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் மோடி வழிபாடும், மிருகத்தனமான பணபலமும் பெரும் பாய்ச்சலை எட்டியுள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தை அதல பாதாளத்திற்குள் தூக்கி எறிவதை நோக்கமாகக் கொண்டு, 400 தொகுதிகளுக்கும் அதிகமான பெரும்பான்மை பெறுவோம் என ஆணவக் கூச்சலிடுகிறார் மோடி. மூன்றாவது முறை பிரதமராகத் துடிக்கிறார் மோடி.