ஏழு கட்டங்களாக, நீண்ட காலம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களின் முதல் கட்டம் ஏப்ரல் 19 ல் தொடங்கும் நிலையில், அய்ந்து நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 14 அன்று, பாஜக தனது 76 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அது மோடி ஆட்சியின் தவறுகள், தோல்விகள் பற்றியோ, 2014 முதல் அள்ளி வீசிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றுக்கும் இழைத்த துரோகங்கள் பற்றியோ பேசவில்லை. சாதாரண பொதுமக்களின் தலையாய பிரச்சனைகளில் முக்கியமானவை எதைப் பற்றியும் பேசவில்லை. மாறாக, 2047ல் இந்தியா எனும் ஒரு கனவுச் சித்திரத்தை வரைகிறது.