ஏஐசிசிடியு: நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

வெள்ளையனே வெளியேறு இயக்க நாளான ஆகஸ்ட் 9 அன்று ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறக் கோரியும் நீட் தேர்வு உள்ளிட்ட மக்கள் விரோதக் கொள்கைகளை ஒன்றிய அரசு கைவிடக் கோரியும் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் சார்பாக நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நெல்லையில் ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் த.சங்கரபாண்டியன், மாநில துணைத் தலைவர் ஜி.ரமேஷ், இகசு(மாலெ) மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன் வண்டலூரில் மாநில சிறப்புத் தலைவர் சொ.இரணியப்பன், மாநிலச் செயலாளர் அதியமான், மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆபிரகாம், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.