புரட்சியாளர் சீனிவாசராவும் அவரது போராட்ட வழி மரபும்! 

சந்திரமோகன்

தஞ்சாவூர் டெல்டாவில்  பெரும் நிலப்பிரபுத்துவ பண்ணைகளும் கோவில்கள், மடங்களும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை குவித்து வைத்திருந்தன. நிலப்பிரபுத்துவசவுக்கடிசாணிப்பால் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்த பண்ணையடிமைகள்உழைப்புக்கேற்ற  நியாயமான பங்கும்உரிமைகளும் இல்லாமல் சுரண்டப்பட்ட   குத்தகை விவசாயிகள் எனத் தஞ்சை மண்ணில் பண்ணை ஆதிக்கம் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. இங்கு, 1940 களில் துவங்கி சுமார் இருபதாண்டு காலம் ஒன்றுபட்ட தஞ்சை மண்ணில்ஒடுக்கப்பட்ட விவசாயசமூகத்தின் விடுதலைக்காக பணியாற்றிய உன்னதமான கம்யூனிஸ்ட் தலைவர் பிஎஸ்ஆர் /BSR என்றழைக்கப்பட்ட தோழர்பி.சீனிவாசராவ்.

கர்நாடக மாநில மங்களூரு அருகே வைதீகமான பார்ப்பன பின்னணியில் பிறந்து வளர்ந்துகம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை ஒரு ஊழியராக  இணைத்துக் கொண்டுதஞ்சை மாவட்டத்தில் கட்சிப் பணிகள் ஆற்ற வந்த தோழர்.பி.எஸ்.ஆர் வாழ்க்கை  வரலாறும், கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியும் பின்னிப் பிணைந்ததாகும்.

தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?

இதுதோழர்பி. சீனிவாசராவ் எழுதிய முக்கியமான பிரசுரம்அன்றைக்கு நிலவிய நிலவுடமைக் குவியல் மற்றும் கொடும் சுரண்டல்அடக்குமுறைகளை விவரிக்கிறது.

"செல்வச் சீமான்கள்

வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் 15,000 ஏக்கர்குன்னியூர் சாம்பசிவ அய்யர் 6000 ஏக்கர், சாமியப்ப முதலியார் 2500 ஏக்கர்கேடிகே எஸ்டேட் 3000 ஏக்கர்கே.எம். தேசிகர் 1500 ஏக்கர்மூலங்குடி கோபாலகிருஷ்ண அய்யர் 2000 ஏக்கர்,…சுருங்கச் சொன்னால்இந்த ஜில்லாவின் பொருளாதார வாழ்க்கையே இவர்களின் இரும்பு பிடிக்குள் அகப்பட்டு மூச்சடைத்து கிடக்கிறது. (இவர்கள்) இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஜில்லா அதிகாரிகள் ....

பண்ணையாட்களின் கதி

உழைத்து உழைத்து ஓட்டாண்டிகளான பண்ணையாட்கள், குத்தகைதார்கள்.... பண்ணையாட்களில் பெரும்பாலோர் ஆதி திராவிடர்களே... நாள் முழுக்க வேலை செய்தால் 1/2மரக்கால் ... அதாவது பட்டணம்படியில் ஒரு படி நெல் தான் மிராசுதார் அளந்து கொடுப்பார்... வருசத்தில் மொத்த வரும்படி 160- 170 ரூபாய் தான்... மொத்த குடும்பம் உழைக்க வேண்டும்... 5 வயது கூட நிரம்பாத பச்சிளங் குழந்தைகள் மிராசுதாரர்களின் மாடுகளை மேய்க்க வேண்டும் .... தன்னுடைய குள்ளக் குடிசையை தாங்கிக் கொண்டிருக்கும் மனைக்கட்டு கூட பண்ணையாளுக்கு சொந்தமல்ல .... சிறு குற்றம் செய்தாலும்... பண்ணையாட்களின் முதுகு தோலை உறிப்பதற்கு என்றே பிரத்தியேகமான சவுக்குகளை வைத்திருக்கிறார்கள் ..."

1947 ல்அவர் எழுதிய இந்தப் பிரசுரம் "தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?" ,  ஒரு ஆவணம், ஆய்வறிக்கைவிவசாயிகள் விடுதலை பற்றிய ஒரு செயல்திட்டம் எனலாம்.

இத்தகைய கடுமையான நிலப்பிரபுத்துவ சுரண்டல் நிலவிய தஞ்சாவூர் மாவட்டத்தில்ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டப்படி, இளம் தோழர்பி.சீனிவாசராவ் அவர்களை செயலாளராக கொண்டு 1943 ல் தமிழக விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டதுமன்னார்குடி அருகில் உள்ள தென்பரை கிராமத்தில்தான் முதலில்  சங்கம் உருவானது.

சுரண்டல்சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்:

தானியத்தை அளக்க மிராசுதாரர்கள், நிலவுடமையாளர்கள் இருவகை மரக்கால் படிகளைப் பயன்படுத்தினார்கள். குத்தகை விவசாயிகளிடமிருந்து குத்தகை/வாரம் பெற தானியங்கள் பெறஅதிக தானியம் பிடிக்கும் "தொம்பரை மரக்கால்என்பதையும், கூலியாட்களுக்கு/பண்ணையாட்களுக்கு கூலி வழங்க குறைந்த அளவு தானியம் பிடிக்கும் "முக்கால் மரக்கால்" (கள்ள மரக்கால்என்பதையும் பயன்படுத்தினார்கள்.

நிலப்பிரபுக்களுக்கு முன்னால் ஆண் கூலியாட்கள், தோளில் துண்டு போடக் கூடாதுஇடுப்பில் கட்ட வேண்டும்பெண்கள் சேலையை கணுக்கால் வரை கட்டக்கூடாதுமுட்டிவரை தான் அணிய வேண்டும் என்பன விதிகளாக இருந்தன. மிராசுதார்கள் தவறு எனக் கருதுவதை செய்யும் பண்ணையாட்களுக்கு சவுக்கடியும், வாயில்  சாணிப்பால் ஊற்றுவதும் தண்டனைகளாக இருந்தனதாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதும், அச்சத்தை ஏற்படுத்துவதும்போராட்ட உணர்வை மழுங்கடிப்பதும் இதன் நோக்கமாகும்.

அச்சத்திலிருந்து மக்களை விடுவிக்க, இடுப்பில் துண்டு கட்டிய மக்களைத் தோளில் சிவப்பு  துண்டு போடச் சொல்லி எதிர்ப்புணர்வை ஊட்டினார்கள், கம்யூனிஸ்டுகள்பி.எஸ்.ஆர் கூலி உயர்வுக்கு எதிராக மட்டுமல்ல, சவுக்கடி சாணிப்பாலுக்கு முடிவு கட்டதோளில் துண்டுகணுக்கால் வரை சேலை எனப் பல்வேறு உரிமைகளுக்காகவும் செயல்பட்டார்.

எதிர்த்துப் போராடும் பண்ணைத் தொழிலாளர், குத்தகை விவசாயிகளை அடக்கி ஒடுக்கவிவசாயிகள் சங்கத்தை நசுக்க மிராசுதார்கள் துடித்தார்கள்அவர்களுக்கு ஆதரவாக கிராமம் கிராமமாக ரிசர்வ் போலீஸ் லாரிகள் வட்டமிட்டு சுற்றி வந்தன. இதற்கு எல்லாம் அஞ்சாத பல்வேறு போராட்டங்கள்கலகங்களின் தொடர்ச்சியாகவிவசாயிகள் சங்கம்நிலவுடமையாளர்கள்அரசாங்கம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் உருவானது.

1944ல்களப்பால் ஒப்பந்தம் உருவானதுஅதில்சவுக்கடிசாணிப்பால் நிறுத்த வேண்டும் என முடிவானது. 1944 டிசம்பரில் கலெக்டர் இஸ்மாயில் கான் தலைமையில்மன்னார்குடி ஒப்பந்தம் ஏற்பட்டதுமுத்திரை மரக்கால் அளவு என முடிவானது.

பி.எஸ்ஆர் தலைமையில் தமிழக விவசாயிகள் இயக்கம், பண்ணையடிமைகளாக இருந்த  விவசாயத் தொழிலாளர்சுரண்டப்பட்ட குத்தகை விவசாயிகள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பிஎஸ்ஆர்!

கீழத் தஞ்சையிலே விவசாயத் தொழிலாளர் பாடி வந்த வயல் பாட்டு பின்வருமாறு இருந்தது.

"கட்டும் சேலையை முட்டிவரை கட்டச் சொன்னது யாரய்யா ஆண்டைஅய்யா என்று கூறய்யா...

கணுக்கால் வரை கட்டச் சொன்னது யாரய்யா, நம்ம சாமி பிஎஸ்ஆர் என்று கூறய்யா..."

பிஎஸ்ஆர் பிறப்பிலான தனது சாதியை தூக்கியெறிந்து விட்டு, ஏழை மக்களோடு... அவர்கள் சாப்பிட்டு வந்த புழுத்த அரிசிகஞ்சிநண்டு, நத்தை என உண்டு அவர்களுடான வாழ்க்கையையே தனது குடும்ப  வாழ்க்கையாக அமைத்துக் கொண்டார்.

நிலப்பிரபுக்களின் கொலை வெறி அச்சுறுத்தல்கள், வழக்குகள்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையின் காரணமாக ஏற்பட்ட  தலைமறைவு வாழ்க்கைவிவசாயிகள் சங்கத்தை பேரியக்கமாக கட்டி எழுப்புவது என்பதாக பிஎஸ்ஆரின் அரசியல் பயணம் இருந்தது. மக்களுக்காகவே உழைத்த அவர் தனது உடல்நலனை பொருட்படுத்தவில்லை. 30.9.1961  அன்று அதிகாலை  5 மணியளவில், தஞ்சாவூரில் தனது 54 வது வயதில்  இறந்தார்.

தஞ்சாவூர் துவங்கி திருத்துறைப்பூண்டி வரை, 50 கி.மீ க்கும் கூடுதலாக வழிநெடுகபல்லாயிரக்கணக்கான விவசாயிகள், கூலி விவசாயத் தொழிலாளர் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். திருத்துறைப் பூண்டியில் 25,000 க்கும் மேற்பட்டோர் அணிதிரண்டிருக்க, இரவு 10.30 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழகத்தில்தஞ்சை டெல்டாவில் மற்றும்  பல்வேறு மாவட்டங்களில் தலித் குடும்பங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்  சீனிவாசராவ் என்ற பெயரோடு இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பது  தோழர். பி.சீனிவாசராவ் ஒரு தலைசிறந்த கம்யூனிஸ்ட்டாக, மக்கள் தலைவராக  வாழ்ந்துள்ளார் என்பதற்கு  சாட்சியமாக திகழ்கிறது.

போராட்ட வழிமரபைத் தொடர்வோம்!

தோழர் சீனிவாசராவ் மறைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது போராட்ட மரபை நினைவுகூரும் போது தோழர்கள் சந்திரகுமார் -சந்திரசேகர்சுப்புபாலன் போன்ற தியாகிகளின் போராட்ட மரபுகளையும் நினைவுகூர்வது பொருத்தமானதாகும்.

சீனிவாசராவ் வாழ்ந்த தமிழ்நாடு, பல மாற்றங்களைக் கண்டது. ‘70களின் பசுமைப்புரட்சி உள்ளிட்ட பொருளாதாரசமூகஅரசியல் மாற்றங்களின் விளைவாக பண்ணையடிமைகள் விவசாயத் தொழிலாளராக உருவெடுத்தனர்பண்ணையார்கள், விவசாய முதலாளிகளாககுலக்குகளாக மாற்றம் பெற்றனர். கிராமப்புற அதிகாரம் குலக்குகள் கைக்கு மாறியதுவிவசாயத்தொழிலாளரை பொருளாதாரச் சுரண்டலுக்கு அடிமைப்படுத்துவதோடுதலித்துகளாக இருந்த அவர்களது சமூக கவுரவத்தைஅரசியல் உறுதியை நொறுக்குவதும் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையிலான நெல் உற்பத்தியாளர் சங்க புதிய மிராசுதார்களின் நோக்கமாக இருந்தது. இதன் விளைவாக  நடத்தப்பட்ட வெண்மணி படுகொலை இந்தியாவையே உலுக்கியது.

வெண்மணிக்குப் பிறகு, 'வர்க்கப் போராட்டங்களால் சமூக ஒடுக்குமுறைகள் தானே அகன்றுவிடும்என்ற சிந்தனைப் போக்கு தமிழ்நாடு இடதுசாரி இயக்கத்தில் மேலோங்கிவர்க்கமாசாதியா? என்ற கருத்துப் போருக்கு களம் அமைத்துக் கொடுத்தது.

‘80 களில் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிய மாலெ கட்சிவர்க்கம் சாதியாக இருப்பதையும் சாதிக்குள் வர்க்கம் இருப்பதையும் புரிந்து உழைப்புச் சுரண்டலையும் சமூக ஒடுக்குமுறையையும் ஒருசேர எதிர்த்துக்களமாடியது. மார்க்சியலெனினிய அரசியலில் தேர்ந்த பள்ளி ஆசிரியரான தோழர் சந்திரகுமார் மாணவர்களுக்கும்மக்களுக்கும் சுயமரியாதையை கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், மேலத்தஞ்சை ஆடுதுறை வட்டார கிராமங்களில்கூலி உயர்வு போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் முன்னோடிப் பாத்திரம் வகித்தார்இந்த வர்க்கப் போராட்டத்தில்சமூக ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில்சந்திரசேகரோடுகள்ளர் சமூகப் பின்னணி கொண்ட தோழர் சந்திரசேகர்  தோளோடு தோள் நின்று களமாடினார்.

‘90 களில்சிவகங்கை மாவட்டத்தின் நாடு கட்டமைப்பு, சாதியாதிக்க குலக்குகளின் அதிகாரம்தலித்துகளின் சமூக சமத்துவத்தைவழிபாட்டு உரிமையை மறுத்ததுஅந்த வழிபாட்டு உரிமையையே போராட்ட வழிமுறையாக்கிகுலக் அதிகாரத்தை எதிர்த்து முறியடித்தவர் தோழர்  மாடக்கோட்டை சுப்புபெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் போராடினார்பறையடிப்பதில்தலித்துகளின் இருபிரிவினர் மத்தியில் வேறுபாடுகள்  உருவானபோதும் கூடஅவர்களை உழைக்கும் விவசாயிகள் சங்கத்தில் வர்க்க பொருளாதார கோரிக்கைகளின் கீழ் ஒன்றுபடுத்த பாடுபட்டார்.

‘80 களின் துவக்கத்தில், தருமபுரியில் நிலவிய மிராசுதாரர்களின் கொடூர கந்துவட்டிச் சுரண்டலை தகர்த்தவர் பாலன்மக்கள் மத்தியில்சமூக சமத்துவம் விதையூன்றுவதற்குதலித்துகள்வன்னியர்களிடையே ஆயிரக்கணக்கான சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுவதற்கு கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் பாலன் காட்டிய வழியில் முன்சென்றனர்.

தோழர் சீனிவாசராவுடன்அவர் தொடங்கி வைத்த போராட்ட மரபை  மார்க்சிய-லெனினிய வழியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு  முன்னெடுத்துச் சென்ற செப்டம்பர் மாதத்தில் தியாகிகளான தோழர்கள் சந்திரசேகர் -சந்திரகுமார், தோழர் சுப்புதோழர் பாலன் ஆகியவர்களை நினைவு கூர்வது காலப் பொருத்தமுடையதாகும்.

தோழர் சீனிவாசராவ் முன்னெடுத்த புரட்சிகரமான விவசாயிகள் இயக்கத்தின் மூலமாகஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மீதான சவுக்கடிசாணிப்பால் கொடுமைகள் மறைந்துவிட்டாலும்ஆயிரக்கணக்கான குத்தகை விவசாயிகளின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாமல்  காத்துக் கிடக்கின்றன.