தற்கொலை செய்துகொள்ளும் விவசாய தினக் கூலித் தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய
குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

தற்கொலை செய்துகொள்ளும் விவசாய தினக் கூலித் தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

வங்கிக் கடன் தள்ளுபடி: கார்பரேட்டுகளுக்கு சேவை புரிதல்

கடந்த எட்டு ஆண்டுகளில் பிஜேபி ஆட்சியின் கீழ், வங்கிக் கடன் தள்ளுபடிகளும் வங்கி மோசடிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே யிருக்கின்றன. 2014 வரை நல்ல நிதி நிலையில் இருந்த பொதுத்துறை வங்கிகள், மோடி ஆட்சி தொடங்கியதில் இருந்து வீழ்ச்சியடையத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில் தான், திருப்பிச் செலுத்தாத கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுடன் நாட்டை விட்டு ஓடிப்போகும் சுதந்திரம் கார்ப்பரேட் மோசடியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. 24,000 கோடி பெரும் கடனுடன் நாட்டை விட்டு வெளியேறிய ரிஷி மிகச் சமீபத்திய முக்கியமான அகர்வால் மிகச் சமீபத்திய நபராவார்.

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு! முற்போக்கு திராவிடத்தின் புதிய கல்விக்கொள்கை!!

தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு

கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார். 'இது பாடம் படிப்பதில் ஏற்பட்ட மன உளைச்சலால் நடந்த தற்கொலைதான்' என வழக்கு விசாரணை முடியுமுன்பே தீர்ப்பு எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் தியாகிகளுக்கு வீரவணக்கம்! மோடியை வெளியேற்ற உறுதியேற்போம்!

1942 ஆகஸ்ட் 9ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் அழைப்பு வெளியான வுடன், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத் தின் ஒரு பகுதியான தேவகோட்டை, (இப்போது சிவகங்கை) திருவாடானை, திருவேகம்பத்தூர் ஆகிய இடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கையிலெ டுத்தனர். ஆகஸ்ட் 14ல் இருந்து 17வரை இப்பகுதி களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களில் தேவகோட்டை மீது நீதிமன்றம் கொளுத்தப்பட்டது. அதன் பின் பிரிட்டிஷ் ராணுவம் போராளிகள் துப்பாக்கியால் சுட்டதில் 75 பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.