ஜூன் 23 பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, "என்னவாகும் எதிர்க்கட்சிகள் வியூகம்" என்று இந்து தமிழ் திசையும், "பயன் தருமா பாட்னா வியூகம்? என்று தினமணியும் ''பாட்னா கும்பல் கூட்டணியாகுமா?" என்று துக்ளக்கும். கேள்விகள் எழுப்பி செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தலைப்புகளிலிருந்தே இந்த செய்திக் கட்டுரைகளின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம், ஜூன் 23, பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை "ஆக்கபூர்வமான வரவேற்கத்தக்க" நிகழ்வாக, இந்தியாவின் இடதுசாரி, ஜனநாயக அரசியல் சக்திகள் மதிப்பீடு செய்துள்ள போதிலும் மேற்கூறியவாறு சில பத்திரிகைகள் கேள்விகள் எழுப்புகின்றன.