துரோகங்களின் சுற்றுப்பயணம்!

2014ல் மோடி பிரதமரானதிலிருந்து இதுவரை 24 முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளாரென ஒரு தகவல் கூறுகிறது. இந்த ஆண்டு, ஜனவரியில் இரண்டுமுறை தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, பிப்ரவரி-மார்ச் ஒரு வாரத்திற்குள் அய்ந்துமுறை வந்து போய்விட்டார். பல்லடம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை என சூறாவளி பயணம் நடத்தியுள்ளார்.

அயோத்தி ராமனைத் தூக்கி வந்த அரசியல் ராமன் !

ஜனவரி 2ல் திருச்சி வந்து சென்ற பிரதமர் மோடி மீண்டும் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்து சென்றார். அமைச்சர் உதயநிதியின் அழைப்பை ஏற்று ஜனவரி 19 அன்று சென்னை வந்த மோடி, விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) கோலாகல நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தபின்னர், தமிழ்நாட்டில் 3 நாட்கள் தங்கிவிட்டார். ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவர், திருவரங்கம், ராமநாதபுரம், ராமேசுவரம், ராமர்பாதம், அரிச்சல்முனை என பல இடங்களுக்குச் சென்று தில்லி வழியாக 22ந் தேதி அயோத்திக்கு சென்றார்.

மோடியின் தமிழ்நாடு வருகை!

"திரும்பிப்போ மோடி" ட்விட்டர் இயக்கத்தால் மோடியை, பாஜகவை பீதியடையச் செய்த தமிழ்நாடு, "வருக மோடி, வணக்கம் மோடி" என்று ட்விட்டர் இயக்கம் நடத்தி திருச்சி வந்த மோடியை வரவேற்றுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடு மகிழ்ச்சி தெரிவிக்கிறது. "வணக்கம் மோடி" ஹாஷ்டேக் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுட்டுரை களைப் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டி பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழ்நாடு மக்களை பாராட்டி மகிழ்ந்துள்ளதையும் அந்த ஏடு செய்தியாக்கி உள்ளது.

செப்டம்பர் அழைப்பு:

நாட்டில், ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மேலும் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.அரசமைப்புச் சட்டமும் நாடாளுமன்ற ஆட்சிமுறையும் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் நாட்டின் முதல் முன்னுரிமையான போராட்ட மாகும். அடித்தள மக்கள் தொடங்கி அனைத்துப் பகுதி மக்களின் முதன்மைப் போராட்டமாகும். தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டம் ஊக்கம் பெற்று வருகிறது. நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு சற்றும் குறையாத இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் முன்களப் பணியாளர்களாக களமாடி வருகிறார்கள்.

மக்களின் சீற்றமே எதிரணி அரசியலுக்கு ஆற்றலாக விளங்கும்; மோடி ஆட்சியை வெளியேற்றும்

ஜூன் 23 பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, "என்னவாகும் எதிர்க்கட்சிகள் வியூகம்" என்று இந்து தமிழ் திசையும், "பயன் தருமா பாட்னா வியூகம்? என்று தினமணியும் ''பாட்னா கும்பல் கூட்டணியாகுமா?" என்று துக்ளக்கும். கேள்விகள் எழுப்பி செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தலைப்புகளிலிருந்தே இந்த செய்திக் கட்டுரைகளின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம், ஜூன் 23, பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை "ஆக்கபூர்வமான வரவேற்கத்தக்க" நிகழ்வாக, இந்தியாவின் இடதுசாரி, ஜனநாயக அரசியல் சக்திகள் மதிப்பீடு செய்துள்ள போதிலும் மேற்கூறியவாறு சில பத்திரிகைகள் கேள்விகள் எழுப்புகின்றன.

திமுகவின் இரண்டாண்டு ஆட்சி

திமுகவின் இரண்டாண்டு ஆட்சியை, "ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டு ஆட்சி" 'ஆண்டது ஈராண்டு ஆளப்போவது நூறாண்டு" என்றும் கொண்டாடப்படுகிறது. திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்றும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

வேங்கைவயல் எழுப்பும் கேள்விகள்

வேங்கைவயல் தலித்துகள் குடிக்கும் சமைக்கும் தண்ணீரில் மலம் கலந்த கொடூரச் செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்து நான்கு மாதங்களாகி விட்டது. இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயலைச் சுற்றி பல இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் உள்ளன. வெளியிலுள்ள வர்கள் வேங்கைவயல் மக்களுடன் கலந்து விடக் கூடாதென்று கவனமாக காவல்துறை சோதனை போட்டுத் தடுக்கிறது. வேங்கைவயல் மக்கள், வெளி உலகத்திலிருந்து துண்டித்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது அரசு செயல்படுத்தும் தீண்டாமை. இது அரசே செய்யும் மனித உரிமை மீறல்.

ஊர் தோறும் ஊராட்சி தோறும் மக்களிடம் செல்வோம்

மார்ச் 20 ல் தொடங்கிய சட்டப்பேரவை தொடர்ந்து நடந்து வருகிறது. பல துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடந்து வருகின்றன. ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து கூறுவதானால், நிதி அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை ஆட்சியாளர்களின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. விவசாய அமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையும் நிதியமைச்சர் காட்டிய பாதையிலேயே உள்ளது.

கனியாமூர் சொல்லும் செய்தி: கல்விக்கும் விடுதலை வேண்டும்

ஜூலை 13, தமிழ்நாட்டிற்கு மற்றுமொரு துயரமான நாள். சின்ன சேலத்துக்கு அருகிலுள்ள கனியாமூரிலுள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இது தற்கொலையென்று பள்ளி நிர்வாகம் சாதிக்கிறது. பொது சமூகம் இது ஒரு பச்சைப் படுகொலை என்று நம்புகிறது. பள்ளி நிர்வாகம் சொல்வது உண்மையா? பொது சமூகம் நம்புவது உண்மையா? எது உண்மை என்பதை அரசின் காவல் துறையும் நீதிமன்றமும் நிரூபித்தாக வேண்டும். தனியார் மேட்டுக்குடி கல்வி நிறுவனங்கள் குற்ற நிறுவனங்களாக மாறிவருகின்றன. சென்ற ஆண்டு மே மாதம் முதல் பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடந்துள்ள கொடூர குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.