Recognising Fascism in India: If Not Now, Then When?

Recognising Fascism in India: 

If Not Now, Then When? 

Ahead of the forthcoming 24th Congress of the CPI(M), an internal note issued by the party polit bureau, and widely reported in the media, has attracted more public attention than the draft resolution released earlier. The draft, in a couple of places, had used the expression 'neo-fascist characteristics' to describe the current political situation and the Modi government.

பெரியார் திராவிட கழகத்தின் தோழர் விடுதலை அரசு ஆற்றிய உரையிலிருந்து.

பொதுவாக பாசிசம் என்பதற்கு பதிலாக காவி பாசிசம் என்று அடைமொழி கொடுத்து இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானதாகும். நான் இங்கு பெரியார் என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறேன். நம்மிடைய பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், மோடி நம்மையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். தமிழகத்தின் சாமானிய மக்களுக்கு பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற மறு உறுதியை கொடுக்கக்கூடிய வரலாற்று கடமை நம் போன்ற இயக்கங்களுக்கு இருக்கிறது.

பச்சை தமிழகம் தலைவர் தோழர் சுப. உதயகுமார் ஆற்றிய உரையின் சுருக்கம்.

நம்முடைய நாடு மிக நெருக்கடியான தருணத்தில் இருக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில் சிபிஐ(எம்எல்) கட்சி மிக முக்கியமான மாநாட்டை நடத்துகிறது. இந்திய சமூகத்தை பாதுகாப்பதற்காக சரியான தருணத்தில் இக்க(மாலெ) எடுத்துள்ள இந்த முயற்சியை மனதாரப் பாராட்டுகிறேன். சில தினங்களுக்கு முன்பாக சங்கிகள் 'தேசத்தின் தந்தை வீர சவார்க்கர்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். யார் இந்த தேசத்தின் தந்தை? பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ மாற்றுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் தொல். திருமாவளவன் உரை...

மிகவும் பிற்போக்குத்தனமான காவிப் பாசிசத்தை எதிர்த்து விவசாயிகளை அணி திரட்டும் நோக்கோடு டெல்டா மாவட்டத்தில் நடத்தப்படும் இந்த மாநாடு சிறப்பு வாய்ந்தது. மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை முறியடிக்க போராட்டக் களத்தில் விவசாயிகள் எப்படி முன் நின்றார்களோ அதுபோல காவிப் பாசிசத்தை முறியடிக்கவும் விவசாயிகள் முன்னிற்க வேண்டும். பாசிசம் ஒரு சித்தாந்தமாக ஜனநாயகத்திற்கு எதிரானது. பாசிசத்தில் கருத்துரிமை பறிக்கப்படுவது மாத்திரமல்ல, அங்கே சமூக நீதிக்கும் இடம் இருக்காது.

காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் உ.வாசுகி உரையிலிருந்து....

இந்த பாசிச எதிர்ப்பு மாநாட்டில் எங்கள் கட்சி சார்பில் ஒருமைப்பாடு தெரிவித்து முழு மனதுடன் பங்கேற்பதாக குறிப்பிட்டவர் பாசிசம் பற்றி விரிவான கருத்தாக்கங்களை முன்வைத் தார். பாசிசத்தை எப்படி வரையறுப்பது? அதன் இந்திய வகை மாதிரி என்ன? அதை முறியடிப் பதற்கான போர்த்தந்திரம் என்ன? என்ற அம்சங்கள் குறித்து அவர் பேசினார்.

பொய், பயங்கரவாத அச்சுறுத்தல், மக்களைப் பிளவுபடுத்துதல், ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக உண்மை, நல்லிணக்கம், துணிவை உயர்த்திப் பிடித்து மதவாத, கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்வோம்!

இன்று நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தஞ்சாவூரில் நாம் கூடியிருக்கி றோம். மதவாத பாசிசம் என்பது ஒரு சிந்தனைப் போக்காக ஒரு சித்தாந்தமாக மாத்திரம் இப்போது இல்லை, அது இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் எதார்த்தமாக இன்றைக்கு நிலவுகிறது. மதவாத பாசிசம் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருப்பதன் மூலம் அது இந்தியாவை சீர்குலைக்கப் பார்க்கிறது. இந்திய வகை பாசிசம், அதனுடைய தன்மைகள், வளர்ச்சி, அதை எப்படி எதிர் கொள் வது? எதிர்த்து எப்படி போராடுவது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!

மோடி ஆட்சியின் அடக்குமுறைகளும், மோசடிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக சங்கிகளின் ஆட்சி, மோடி என்கிற தனிநபரின் ஆட்சி என்பதாக இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறி வருகிறது. சர்வாதிகாரம், யதேச்சாதிகாரம் என்பன அடிப்படையில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். பாசிசம் என்பது அரசு எந்திரத்தோடு கூடவே, தனியார் படைகளை, அரசு சாராத படைகளை, அரசு சாராத கும்பல்களைப் பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். இதுவும் கூட பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.