நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி தென்காசி மாவட்டம் வடகரை பேரூராட்சி அலுவலகம் முன்பு 18.4.2022 அன்று அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்&லெனினிஸ்ட்)விடுதலை சார்பில்  ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் தோழர் முத்துசாமி தலைமையில், தோழர்கள் சேக் மைதீன், தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து அவிகிதொச மாநிலச் செயலாளர் தோழர் குணசேகரன் உரையாற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் ஐயப்பன், ஏஐசிசிடியு மாவட்டப் பொறுப்பாளர் அயூப்கான், முற்போக்கு பெண்கள் கழக மாவட்டப் பொறுப்பாளர் பிச்சுமணி இகக(மாலெ) விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர்கள் மாரியப்பன், வேலு, சுப்ரமணியன், மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் தோழர்கள் ஜோதி, செல்வி, நாகலட்சுமி உட்பட 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் பொதுமக்களிடம் வந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.