கொல்கத்தாவில் மாணவர்கள் இளைஞர்கள் மீது

தாக்குதல் வன்மையான கண்டனம்!

மேற்கு வங்கத்தில் அரசுப் பணிகளில் வேலைக்கு ஆளெடுப்பதில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து, புரட்சிகர இளைஞர் கழகம் - RYA மற்றும் அகில இந்திய மாணவரத கழகம் - AISA சார்பில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் மேற்கு வங்க மாநில சிபிஐ-எம்எல் விடுதலை செயலாளர் தோழர் அபிஜித் மஜும்தார், AISA தலைவர் நிலாஷிஸ், RYA தலைவர் ரன்அஜாய் மற்றும் பல முன்னணி தோழர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்வலமாக சென்றவர்களை ராம்லீலா மைதானத்தில் போலீசார் தடுத்தனர். போலீசார் நடத்திய தடியடி தாக்குதலில் பெண்கள் உட்பட பல தோழர்கள் காயம் அடைந்துள்ளனர்.

மே.வங்கத்தில் அரசுப் பணிகளில்

ஆட்சேர்ப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களையும் உடனடியாக பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் டிஎம்சி அமைச்சர்கள் பார்த்தா சட்டோபாத்யாய் மற்றும் பரேஷ் அதிகாரி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த பேரணி நடைபெற்றது.

ஜனநாயக போராட்டங்களை ஒடுக்குவது திரிணாமுல் மம்தா அரசாங்கத்தின் அடையாளமாக மாறி வருகிறது.

டியூச்சா-பச்சாமி நிலக்கரி திட்டத்தை எதிர்க்கும் ஆதிவாசிகள், பராக்காவில் அதானியின் உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு எதிராகப் போராடும்

விவசாயிகள் மற்றும் அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்பு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர், இளைஞர் செயல்வீரர்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஆகியவை சிலவகை மாதிரி உதாரணங்களாகும்.

பாஜக ஆட்சியை கைப்பற்றும் அச்சுறுத்தலில் இருந்து மாநிலத்தை காப்பாற்றத்தான், 2021 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்க மக்கள் திரிணாமுல் டிஎம்சி அரசாங்கத்திற்கு மூன்றாவது முறையாக ஆட்சியை வழங்கினர்; 2021 தேர்தல் தீர்ப்பின் உணர்வை திரிணாமுல் அரசாங்கம் கேலிக்கூத்தாக்கி வருகிறது.