ஜுலை 18, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ) சார்பில் கனியாமூர் சக்தி மெட்குலேசன் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
உயிர் இழந்த ஶ்ரீமதிக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் - கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி விடுதியில் மரணம் - நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கிடவும் -  மாணவியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்!