செப்13 தோழர் சுப்பு நினைவுநாள்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கருகில் உள்ள மாடக்கோட்டையில், தென் தமிழ்நாட்டில் நிலவிய " நாடு" என்கிற நிலவுடமை சாதீயாதிக்க அடக்குமுறை கட்டமைப்புக்கு எதிராக சவால் விட்டதற்காக, புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்தை கடடியெழுப்பியதற்காகக் கொல்லப்பட்ட தோழர்.சுப்புவின் 28வது ஆண்டு நினைவு நாளான இன்று, மாடக்கோட்டையில் சிபிஐ_எம்எல் சிவகெங்கை மாவட்ட கமிட்டி சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சிபிஐ-எம்எல் மாநில குழு உறுப்பினர் அ.சிம்சன் மற்றும் பல்வேறு அமைப்புத் தோழர்கள் நினைவுரையாற்றினர்