புதுச்சேரி மாநிலத்தில் ரங்கசாமி - நமச்சிவாயம் அரசு வழங்கும் ரேஷன் அரிசியை துணை நிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 'அப்பிடியே' சாப்பிட்டால் ரூ.1001/ அன்பளிப்பு என்று அறிவித்து போராட்டம் 11.08.2022 அன்று புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு (கொக்கு பார்க் அருகில்) இகக(மாலெ) கட்சியின் உழவர்கரை தொகுதிப் பொறுப்பாளர் தோழர். விஜயா தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் இகக(மாலெ) மாநிலச் செயலர் சோ.பாலசுப்பிரமணியன், புதுச்சேரி மாவட்டச் செயலர் எஸ்.புருஷோத்தமன், ஏம்பலம் தொகுதிப் பொறுப்பாளர் கோ.பழனி, எஐசிசிடியு மாநிலத் தலைவர் சோ. மோதிலால், மங்கலம் தொகுதிப் பொறுப்பாளர் முருகன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் தலைவர் மா.மல்லிகா, புதுச்சேரி நகர கமிட்டி செயலர் அந்தோணிராஜ், புரட்சிகர இளைஞர் கழகம் அமைப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.