மோடி உத்தரவாதம் - உலக மகா வாய்ச் சவடால்

என்ன செய்தார் மோடி?

 

 

      வாய்ச் சவடால் உத்தரவாதம்  

 

உண்மை

 

இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுகிறது மோடி அரசு.

பெண்கள் மீது பிஜேபி தொடுக்கும் போர்

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிக்கும் 20 வயது மாணவியை மூன்று பேர் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்கிற செய்தி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், 2023ம் ஆண்டின் கடைசி நாளில்தான் வெளியே தெரிந்தது. இறுதியாக அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிஜேபி ஐடி செல்லைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பிஜேபி வாரணாசி ஐடி செல்லின் அமைப்பாளர். மற்றொருவர் துணை அமைப்பாளர்.

மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் நீக்கம், எதிர்ப்புக் குரல்களை மவுனமாக்கும் மோடி அரசாட்சியின் வெட்கக்கேடான செயலாகும்

வெள்ளிக்கிழமையன்று மக்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை நீக்கியிருப்பதன் மூலம் அதானியுடைய மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியை அல்லது கார்ப்பரேட் போட்டிகளாலும் நேர்மையற்ற அரசியல் வழிமுறைகளாலும் உந்தப்படும் மோடி அதானி கூட்டை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் சட்டப்பூர்வமற்றதாக்க மோடிஷா அரசாட்சி எந்தவொரு எல்லைக்கும் செல்லும் என தெளிவாக்குகிறது.

மகளிர் உரிமைத் தொகை: 1000 ரூபாய்; 1001 நிபந்தனைகள்!

ஜூலை 16 அன்று இந்து தமிழ் திசை நாளேட்டில், மகளிர் உரிமைத் தொகையா? உதவித் தொகையா? என்ற கேள்வியுடன் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரையாளர் பிருந்தா சீனிவாசன்  எழுதியிருந்த அந்த கட்டுரை, திமுக ஆட்சியை பலவாறும் குறை கூறியிருந்தது. திமுக அரசை குறை கூறுவதன் மூலம் திமுக எதிர்ப்பு வெளியை விரிவுபடுத்தி பாஜக- அதிமுகவுக்கு உதவும் வேலையை இந்து தமிழ் திசை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இந்த கட்டுரை, பெண்கள் மத்தியில் திமுக ஆதரவை சரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையை முன்வைத்து 'மகளிர் உரிமைத் திட்டத்தை' ஆய்வு செய்வோம்.

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் பஹல்வான்!

நமது மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியை உறுதி செய்வதற்காக நமது முழு நாட்டையும் ஜந்தர் மந்தராக மாற்றுவதற்கான நேரம் இது !

பெண்கள் விரோத பாஜக மோடி ஆட்சியை வெளியேற்றுவோம்

அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் மாநில ஊழியர் கூட்டம் 16.04.2023 அன்று திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ரேவதி, இக்க(மாலெ) கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் கிருஷ்ணவேணி, தேன்மொழி, பிலோமினா, ஈஸ்வரி, மனோன்மணி கொண்ட தலைமைக்குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கனியாமூர்-வேங்கை வயல் முதல் அம்பை-உடன்குடி வரை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கையை துரிதமாக எடுப்போம்... இந்த அரசைப் பொறுத்தவரை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே ஓர் அவமானச் சின்னம் என்று கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று ஏப்ரல் 12 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தோள் சீலைப் போராட்டம் 200 ஆண்டுகள்: போராட்டம் தொடர்கிறது!

தோள் சீலைப் போராட்டம், மானுட மாண்பை, பெண்களது தன் மானத்தை மீட்டுக் கொள்வதற்கான உரிமைப் போராட்டம். சமுதாயத்தின் சரிபாதி பெண்களது இந்தப் போராட்டம் மொத்த சமுதாயத்தின் போராட்டமாகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, பற்றிப் படர்ந்த உக்கிர மிகுந்த இந்தப் போராட்டம், ஆகச்சிறந்த பண்பாட்டு, அரசியல், பொருளாதாரப் போராட்டமாகும்.

சமத்துவம், நீதி, கண்ணியமிக்க வாழ்வாதாரம் பெறும் உரிமைகளுக்காகப் போராடுவோம்! பெண்களுக்கு எதிரான கார்ப்பரேட் இந்துத்துவா வன்முறைக்கு பதிலடி கொடுப்போம்!

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளை மதிக்கவும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், பெண்கள் தினம் என குறிக்கப்பட்டுள்ள எட்டு மணிநேர வேலையின் வெற்றி, புதிய தொழிலாளர் சட்டங்களின் மூலம் தலைகீழாக மாற்றப்பட்டு வருகிறது என்பது நமது காலத்தின் நகைமுரணாகும். பணியிடங்களில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய சம வேலைக்கு சம ஊதியத்திற்கான உத்தரவாதம் இன்னும் அளிக்கப்படவில்லை.

சுடும் எதார்த்தமும் போராட்ட உணர்வும்

'ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு நீதான அனுப்பின உம் பையன'. காலேஜ் படிக்கும் தன் மகன் அப்பார்ட்மெண்ட் செப்டிக் டேங்க் கழுவச் சென்று விஷ வாயு தாக்கி இறந்து விட்டான் என்பதை நம்ப முடியாமல் என் மகனைக் காட்டு, அவனைக் காட்டுங்கள் என்று கதறும் தூய்மைப் பணியாளரான தாயிடம் அரசாங்க ஆஸ்பத்திரியில் அடாவடியாகப் பேசுகிறது போலீஸ். மலக் குழி மரணம். புகார் வாங்கக் கூட மறுக்கும் போலீஸ், கம்ப்ளைண்ட் எதுக்கு? என்ன பண்ணப் போறீங்க? எதுவும் நடக்காது. பேசி முடிச்சா கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்கிறது. இன்னொரு பக்கம், மாநகராட்சி அலுவலகம்.