மோடி உத்தரவாதம் - உலக மகா வாய்ச் சவடால்

என்ன செய்தார் மோடி?

 

 

      வாய்ச் சவடால் உத்தரவாதம்  

 

உண்மை

 

இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுகிறது மோடி அரசு.

பெண்கள் மீது பிஜேபி தொடுக்கும் போர்

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிக்கும் 20 வயது மாணவியை மூன்று பேர் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்கிற செய்தி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், 2023ம் ஆண்டின் கடைசி நாளில்தான் வெளியே தெரிந்தது. இறுதியாக அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிஜேபி ஐடி செல்லைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பிஜேபி வாரணாசி ஐடி செல்லின் அமைப்பாளர். மற்றொருவர் துணை அமைப்பாளர்.

மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் நீக்கம், எதிர்ப்புக் குரல்களை மவுனமாக்கும் மோடி அரசாட்சியின் வெட்கக்கேடான செயலாகும்

வெள்ளிக்கிழமையன்று மக்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை நீக்கியிருப்பதன் மூலம் அதானியுடைய மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியை அல்லது கார்ப்பரேட் போட்டிகளாலும் நேர்மையற்ற அரசியல் வழிமுறைகளாலும் உந்தப்படும் மோடி அதானி கூட்டை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் சட்டப்பூர்வமற்றதாக்க மோடிஷா அரசாட்சி எந்தவொரு எல்லைக்கும் செல்லும் என தெளிவாக்குகிறது.

மகளிர் உரிமைத் தொகை: 1000 ரூபாய்; 1001 நிபந்தனைகள்!

ஜூலை 16 அன்று இந்து தமிழ் திசை நாளேட்டில், மகளிர் உரிமைத் தொகையா? உதவித் தொகையா? என்ற கேள்வியுடன் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரையாளர் பிருந்தா சீனிவாசன்  எழுதியிருந்த அந்த கட்டுரை, திமுக ஆட்சியை பலவாறும் குறை கூறியிருந்தது. திமுக அரசை குறை கூறுவதன் மூலம் திமுக எதிர்ப்பு வெளியை விரிவுபடுத்தி பாஜக- அதிமுகவுக்கு உதவும் வேலையை இந்து தமிழ் திசை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இந்த கட்டுரை, பெண்கள் மத்தியில் திமுக ஆதரவை சரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையை முன்வைத்து 'மகளிர் உரிமைத் திட்டத்தை' ஆய்வு செய்வோம்.

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் பஹல்வான்!

நமது மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியை உறுதி செய்வதற்காக நமது முழு நாட்டையும் ஜந்தர் மந்தராக மாற்றுவதற்கான நேரம் இது !