தலித்துகள் மீது முடிவின்றித் தொடரும் வன்கொடுமைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

தமிழ்நாட்டில், தலித்துகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகள் நடந்துள்ளன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மாதிரிக்குச் சில....

புதுக்கோட்டை வேங்கைவயல்

2022ம் ஆண்டு டிசம்பரில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கயவர்கள் மலம் கலந்தார்கள். குற்றவாளிகள் சாதியாதிக்க சக்திகள்தான் எனத் தெரிந்த போதும், தலித்துகளையே குற்றவாளிகள் ஆக்க முயற்சிக்கப் பட்டது. சிறப்பு புலனாய்வு, உயர்நீதிமன்ற புலனாய்வு எல்லாம் நடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப் படவில்லை. 

மதுரை காயாம்பட்டி

வாச்சாத்தி பழங்குடியினர் மீதான வன்கொடுமையும் உயர் நீதிமன்றத் தீர்ப்பும்

சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில், சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய ஆளுங்கட்சி கொள்ளையர் களைக் காப்பாற்ற, அப்பாவி பழங்குடியினர் பலிகடாக்கள் ஆக்கப்பட்ட, படுமோசமான வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளான கொடூரமான சம்பவம் தான் வாச்சாத்தி வன்முறை' என்பதாகும். அது பழங்குடியினப் பெண்கள், சிறுமியர் மீது பாலியியல் கூட்டுப் பலாத்கார வன்முறையை நடத்திய வனத்துறை, காவல்துறை சார் குற்றவாளிகளின் ஆணாதிக்க வெறியாட்டத்தின் சாட்சியமும் ஆகும்.

வாச்சாத்தி வன்முறை, நீதிக்கான போராட்டம் : கடந்து வந்த பாதை :

மதுரை மாவட்டத்தில் நிலமீட்பு போராட்டங்கள்

நகர்மயமாதல் அதிகமாகிவருகிறது. அதன் தாக்கம் கிராமப்புற பகுதிகளுக்கும் பரவுகிறது. பெருநகரங்களுடன் சாலைகளால் இணைக்கப் பட்டுள்ள பேரூராட்சிகளின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கிராமங்களில், தங்கள் தங்கள் சாதி வளைகளில் சிக்குண்ட மக்கள் குடியிருப்புகள் போதாமல் விழிபிதுங்குகின்றன. அவர்கள் தங்களுக்கான புதிய வீடுகளைக் கட்டிக்கொள்ளாதபடி, நிலத்தின் விலை அதிகரிப்பும், சாதிச் சுவர்களும் தடுக்கின்றனர். இதனால் கிராமப்புறங்களில் வீட்டுமனைக்கான தேவை அதிகரித்தும் வீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை இருக்கிறது.

வாச்சாத்தி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை, சிபிஐஎம்எல் கட்சி வரவேற்கிறது!

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் மீது, கடந்த 1992ல் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை வழக்கில் தர்மபுரி அமர்வு நீதிமன்றம் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 215 குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனைகளை வழங்கியது. அதன் மீது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை சிபிஐஎம்எல் கட்சி வரவேற்கிறது.

நாங்குநேரி கொடூரம்: தொடரக் கூடாது குற்றச் செயலுக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்! குற்றம் செய்தது மாணவர்கள் மட்டுமே அல்ல!

பள்ளியில் சாதிய காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்ட மாணவர் சிலர், அதன் தொடர்ச்சி யாக தலித் மாணவன் சின்னத்துரை வீடு புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். குற்றமிழைத்தவர்கள், சின்னத்துரையோடு படிக்கும் உயர் சாதி எண்ணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்!

இது சொல்லொணா கடும் அதிர்ச்சி அளிக்கிறது. சின்னத்துரை தங்கை, சந்திரா செல்வியும் கொடூர காயங்கள் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம், அவர்களது தாத்தா உயிரையும் பறித்துள்ளது.

சாராய வழக்கு - சிறை மரணம் வன்கொடுமைப் படுகொலைகள்

'எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்திட வேண்டும், எனது தந்தை குடிப்பழக்கத்தை எப்போது நிறுத்துகிறாரோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வேலூரைச் சேர்ந்த 16 வயது கொண்ட விஷ்ணுப்பிரியா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளச் சாராயத்தால் பலர் இறந்தபோது அரசே விற்கும் சாராயத்தால் குடும்பம் சீரழிந்து குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி, அவர்களே சாவைத் தேடிக் கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

ஏஐசிசிடியு முயற்சியால் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, அம்பாசமுத்திரம் கிராமத்தில் மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பேர் 7 மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்து கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி தமிழ்நாடு சிபிஐ(எம்எல்) தோழர்களுக்குக் கிடைத்தது. அந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிரா வின் பீட் மற்றும் பார்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை அண்ணா கோத்வே என்கிற ஒப்பந்தக்காரர்தான் அடிமைகளாக வைத்திருந்துள்ளார். அவர் சரத்பவாரின் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்.

வேங்கைவயல் எழுப்பும் கேள்விகள்

வேங்கைவயல் தலித்துகள் குடிக்கும் சமைக்கும் தண்ணீரில் மலம் கலந்த கொடூரச் செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்து நான்கு மாதங்களாகி விட்டது. இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயலைச் சுற்றி பல இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் உள்ளன. வெளியிலுள்ள வர்கள் வேங்கைவயல் மக்களுடன் கலந்து விடக் கூடாதென்று கவனமாக காவல்துறை சோதனை போட்டுத் தடுக்கிறது. வேங்கைவயல் மக்கள், வெளி உலகத்திலிருந்து துண்டித்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது அரசு செயல்படுத்தும் தீண்டாமை. இது அரசே செய்யும் மனித உரிமை மீறல்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டிலும் வரம்பின்றி தொடரும் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள்

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், ஈழவர்கள், புலையர்கள், தீயர்கள் நடமாடத் தடை விதிக்கப் பட்டிருந்தது. அந்த மக்களை தடைவிதிக்கப் பட்டிருக்கும் தெருக்களில் 1924 மார்ச் 30 அன்று ஊர்வலமாக அழைத்துப் போகப் போவதாக அன்றைய கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி.கேசவ மேனன் அறிவிப்பு வெளியிட்டார். அப் போராட்டத்தைத் துவக்கியவர் வழக்கறிஞராக இருந்த டி.கே.மாதவன். தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று இருந்த காலக் கட்டம் அது. அறிவித்தபடி தொண்டர்களுடன் அணி திரண்டனர். அந்தத் தெருவில் சென்று நின்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

நீதிக்கான போராட்டத்தில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஒன்று சேருவோம். அதுதான் தோழர் சந்திரபோசுக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலி

அனைவருக்கும் வணக்கம்!

தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள கட்சி சிவகங்கை மாவட்டத் தலைமைக் குழுவுக்கு பாராட்டுகள்.

தோழர் செந்தமிழ், இது கந்தக பூமி என்று சொன்னார். இந்த பூமியை எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்படி வேண்டுமானாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்போது வேண்டுமானாலும் தீப்பிடித்துக் கொள்ளும் என்று சொன்னாரா? தெரியவில்லை. அவர்தான் சொல்ல வேண்டும்.