தேர்தல் வந்தாலே பாஜக-சங்கிகளின் அட்டூழியங்கள் அதிகமாகத் தொடங்கிவிடும். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இஸ்லாமிய ஓட்டுநரை பசுவைக் கடத்தினார் என்று பசுப் பாச பாஜக குண்டர்கள் அடித்தே கொன்றுவிட்டார்கள். கடந்த ஆண்டு ராம நவமியின் போது சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வாழுமிடங்கள், பள்ளிவாசல்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று, கலவரங்கள் செய்து காவிக் கொடியை பள்ளிவாசல்களில் கட்டினார்கள். வாளை ஏந்திக் கொண்டு, இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்களைக் கத்திக் கொண்டு ஊர்வலம் நடத்தினார்கள். அனுமன் ஜெயந்தியின் போதும் இதுபோன்ற கலவரங்களை கட்டவிழ்த்து விட்டது சங்கிகள் கூட்டம். இவ்வாண்டும் ராம நவமியின் போது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இடங்களில் சங்கிகள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மட்டுமின்றி, பாஜக ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களிலும் திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளார்கள் பாஜகவினர். ராம நவமி முடிந்த பின்னரும்கூட மேற்கு வங்கம் ஹுக்ளி மாவட்டத்தில், பிகார் நாலந்தா மாவட்டத்தில் கலவரங்கள் செய்து இஸ்லாமியர்களின் வீடுகளை, கடைகளை, குறிப்பாக மதராசாக்களைச் சூறையாடி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்கள். பிகார் சரீப்பில் உள்ள அஸிஸியா மதராஸா மற்றும் நூலகத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள். 110 ஆண்டுகள் பழைமையான நூலகம் அது. நூலகங்களை குறிவைத்துக் கொளுத்துவது சங்கிகளின் திட்டமிட்ட நடவடிக்கையாகும். பாஜக இப்போது இருக்கும் மிருக பலத்துடன் இல்லாமல் ஆட்சியில் இருந்த காலத்திலும் கூட அவர்கள் திட்டமிட்டு நூலகங்களைக் கொளுத்தியுள்ளார்கள். வாஜ்பாய் ஆட்சி மத்தியில் இருந்தபோது சென்னையில் இந்த ஆர்எஸ்எஸ் கும்பல்கள் பாரதி புத்தகாலயம் புகுந்து, புத்தகங்களை எரித்து நாசப்படுத்தினார்கள். பாசிச சங்கிகளுக்கு தங்களுடைய பசு மூத்திரத்தின் பலன்கள் போன்ற மூடத்தனமான புத்தகங்கள் தவிர வேறு எதையும் மக்கள் படித்துவிடக் கூடாது. அதுவும் பகுத்தறிவு புத்தகங்களை மக்கள் படித்து விடக் கூடாது, அறிவை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள். மதராஸாக்கள் பயங்கரவாதிகளின் புகழிடம் என்றும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் சங்கிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து மதராஸாக்களை நாசப்படுத்துகிறார்கள். ஆர்எஸ்எஸ் சங்கிகள் மட்டும் கோயில்களில், பள்ளிக் கூடங்களில் சாகா பயிற்சி என்ற பெயரில் ஆயுதப் பயிற்சி எடுப்பார்கள். ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களில் வெளிப்படையாக கம்பு, வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு செல்வார்கள். துப்பாக்கிகளைக்கூட தங்கள் ஊர்வலங்களில் எடுத்துச் செல்கிறார்கள். ஆர்எஸ்எஸ் ஊர்வலங்கள் தாண்டி, இந்து மத ஊர்வலங்களை நடத்தும் போதும் ஆயுதங்களுடன் இப்போது செல்கிறார்கள். காவல்துறையினரும் அதைக் கண்டு கொள்வதில்லை. மதவெறியைத் தூண்டி, மக்களைத் துண்டாடி அதன் மூலம் வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடிப்பதை ஒரு உத்தியாகவே வைத்துள்ளது பாஜக. 2014 தேர்தலின் போது உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் திட்டமிட்டு கலவரம் செய்து இஸ்லாமியர்களைக் கொன்று, இந்துக்கள் வாக்கை வாங்கி ஆட்சிக்கு வந்தார்கள். சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலின் போதும் இதே வன்முறைத் திட்டத்தைக் கையாண்டார்கள். அதற்காகவே அமித்ஷா படை பரிவாரங்களுடன் செல்கிறார். மீண்டும் மோடியை ஆட்சியில் அமர வைத்திடுங்கள், எங்கள் ஆட்சி வந்தபின்னர் கலவரக் காரர்கள் தலைகீழாகத் தொங்கவிடப்படுவார்கள் என்று கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி வாக்கு வாங்கும் அமித் ஷா பேசுகிறார். இவர்களின் கலவரத் திட்டத்தை, மோ(ச)டியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வீழ்த்திட வேண்டியது நாட்டு மக்கள் அனைவரின் கடமையாகும்.