தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மறைந்த மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலிக் கூட்டம் கோவையில் 22.12.2022 அன்று மாலை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் கொண்டு வந்திருந்த தோழர் என்.கே. நினைவுச் சுடரை, இகை(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கரிடமும் என்.கே.யின் குடும்பத்தினரிடமும் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தோழர் என்.கே.நடராஜன் அவர்களின் திருவுருவப் படத்தை தோழர் திபங்கர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கட்சியின் மத்தியக்குழு பார்வையாளரும் கர்நாடகா மாநிலச்செயலாளருமான தோழர் கிளிப்டன் உரை

கட்சியின் தமிழ்நாடு மாநில 11 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக ஆர்எஸ்எஸ்ஸின் பாசிசத் தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடும் கூட அதில் தப்பிக்கவில்லை. தமிழ்நாடு கட்சியின் முதன்மையான குறிக்கோள், பாசிசத் தாக்குதலை எதிர்ப்பது தான் என்று தமிழ்நாடு கட்சித் தோழர்கள் மிகச் சரியாகவே தீர்மானித்துள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களாக கட்சி அறிக்கை, விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

நட்சத்திரம் நகர்கிறது:

பின்னணியில் அமெரிக்க கறுப்பின பாடகி நீனா சிமோன்இன் 'இட்ஸ் எ நியூ டான்' (இதுவொரு புதிய காலை) என்ற பாடல் ஒலிக்கிறது. ஆஸ்திரிய ஓவியர் குஷ்டாவ் கிளிம்ன்ட்இன் புகழ்மிக்க ஓவியம் 'த கிஸ்' (அந்த முத்தம்) காட்சியாகிறது. கலவி முடிந்த பின் தன் காதலனிடம் "இனியா, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என காதலி கேட்கிறாள். அப்படித் தொடங்கும் உரையாடல் இளையராஜா குறித்த விவாதமாக, வாக்குவாதமாக உருமாறு கிறது. அவள் தனது உணர்வுகளை மதிக்க வில்லை என எரிச்சல் கொண்டு, காதலி மீது ஏற்படும் வெறுப்பினால் அவளை சாதி அடிப்படையில் அவமானப் படுத்துகிறான் காதலன். அதனால் கலவி வரை வந்த காதல் சண்டையில் முடிந்து பிரிகிறார்கள்.

பாசிச எதிர்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியாக இகக(மாலெ)வை வலுப்படுத்திட"மாநாடு உறுதி ஏற்கிறது!

கள்ளக்குரிச்சி 4வது மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 20, 2022 அன்று கெடிலத்திலுள்ள தோழர் சம்மனசு மேரி அரங்கின் முன் கட்சிக் கொடியை மாநிலச் செயலாளர் என் கே ஏற்றி வைக்க தியாகிகள் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி தொடங்கியது. தோழர்கள் ஜெயந்தி, கொளஞ்சிநாதன் உள்ளிட்ட தலைமைக்குழு தோழர்கள் மாநாட்டை வழி நடத்தினர்.

250 கட்சி உறுப்பினர்கள், 26 கட்சிக் கிளைகள், 7 உள்ளூர் கமிட்டிகள், 3200 வெகு மக்கள் உறுப்பினர்கள், உறுப்பினர் கட்டணம் முழுவதும் செலுத்தியது உள்ளிட்ட தகுதிகளை சரிபார்த்த மாநிலக் கமிட்டி பார்வையாளர் தோழர் ஜி. தனவேல் மாநாட்டை தொடக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.

இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கருடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

7.9.2022 அன்று டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்திய அலுவலகத்தில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் சந்தித்துக் கொண்டனர். பாஜகவின் புல்டோசர் ராஜ்ஜியத்தை தடுத்து நிறுத்திட செயலூக்கமுள்ள பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டியதன் அவசரத் தேவை பற்றி அவர்கள் விவாதித்தார்கள். பீகாரின் பற்றி எரியும் பிரச்சனைகளும் விவாதத்தில் இடம் பெற்றன. ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஒன்றுபட்ட முயற்சியின் அவசர தேவை பற்றியும் இகக(மாலெ) பொதுச்செயலாளர் எழுப்பினார்.

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு! முற்போக்கு திராவிடத்தின் புதிய கல்விக்கொள்கை!!

தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள்

கிளாஸ்டன்

காளியப்பன்

* வினிதா

* ரஞ்சித்குமார் தமிழரசன்

செல்வசேகர்

அந்தோணி மணிராஜ்

ஸ்னோயின் கந்தையா ar கார்த்திக்

ஜெயராமன்

சண்முகம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இகை(மாலெ) சார்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போர் நடத்தி மனு அளிக்கப்பட்டது.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.