தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது
மாநிலச் செயலாளர் குணால், பொலிட்பீரோ உறுப்பினர் திரேந்திர ஜா, ராஜாராம் சிங், கே.டி.யாதவ், சட்டமன்றக் குழுத் தலைவர் மஹ்பூப் ஆலம் மற்றும் துணைத் தலைவர் சத்யதேவ் ராம், மீனா திவாரி, சக்ஷி யாதவ் ஆகியோர் அடங்கிய சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர் தலைமையிலான குழு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை 2022 ஆகஸ்ட் 13ம் தேதி சந்தித்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, 2022 ஜூலை 24 அன்று நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாட்டிலும் காவிப் பாசிச கூக்குரல் கள் அதிகரித்து வரும் வேளையில், இதக (மாலெ) அழைப்பை ஏற்று தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி இந்த காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள், விசிக, பச்சை தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர்களுக்கு நன்றி யையும் மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திர ளாய் கலந்து கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

பெரியார் திராவிட கழகத்தின் தோழர் விடுதலை அரசு ஆற்றிய உரையிலிருந்து.

பொதுவாக பாசிசம் என்பதற்கு பதிலாக காவி பாசிசம் என்று அடைமொழி கொடுத்து இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானதாகும். நான் இங்கு பெரியார் என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறேன். நம்மிடைய பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், மோடி நம்மையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். தமிழகத்தின் சாமானிய மக்களுக்கு பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற மறு உறுதியை கொடுக்கக்கூடிய வரலாற்று கடமை நம் போன்ற இயக்கங்களுக்கு இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் பெரியசாமி ஆற்றிய உரையிலிருந்து...

எட்டு ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களை செயல்படாமல் ஆக்கியுள்ளதையும் பல்வேறு அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், செயல் பாட்டாளர்களை சிறையில் அடைத்து வைத்துள் ளதையும் நாம் அறிவோம். அமித்ஷா தமது கட்சியின் அகில இந்திய கூட்டம் ஒன்றில் அடுத்த 40 ஆண்டுகள் பாஜக ஆட்சி தொடரும் என்று அறிவிக்கிறார்.அது மாத்திரம் அல்ல, தமிழ்நாடு உட்பட பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் அறைகூவல் விட்டிருக்கிறார். இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் எப்பாடு பட்டாவது அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பச்சை தமிழகம் தலைவர் தோழர் சுப. உதயகுமார் ஆற்றிய உரையின் சுருக்கம்.

நம்முடைய நாடு மிக நெருக்கடியான தருணத்தில் இருக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில் சிபிஐ(எம்எல்) கட்சி மிக முக்கியமான மாநாட்டை நடத்துகிறது. இந்திய சமூகத்தை பாதுகாப்பதற்காக சரியான தருணத்தில் இக்க(மாலெ) எடுத்துள்ள இந்த முயற்சியை மனதாரப் பாராட்டுகிறேன். சில தினங்களுக்கு முன்பாக சங்கிகள் 'தேசத்தின் தந்தை வீர சவார்க்கர்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். யார் இந்த தேசத்தின் தந்தை? பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ மாற்றுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.

காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் உ.வாசுகி உரையிலிருந்து....

இந்த பாசிச எதிர்ப்பு மாநாட்டில் எங்கள் கட்சி சார்பில் ஒருமைப்பாடு தெரிவித்து முழு மனதுடன் பங்கேற்பதாக குறிப்பிட்டவர் பாசிசம் பற்றி விரிவான கருத்தாக்கங்களை முன்வைத் தார். பாசிசத்தை எப்படி வரையறுப்பது? அதன் இந்திய வகை மாதிரி என்ன? அதை முறியடிப் பதற்கான போர்த்தந்திரம் என்ன? என்ற அம்சங்கள் குறித்து அவர் பேசினார்.

பொய், பயங்கரவாத அச்சுறுத்தல், மக்களைப் பிளவுபடுத்துதல், ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக உண்மை, நல்லிணக்கம், துணிவை உயர்த்திப் பிடித்து மதவாத, கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்வோம்!

இன்று நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தஞ்சாவூரில் நாம் கூடியிருக்கி றோம். மதவாத பாசிசம் என்பது ஒரு சிந்தனைப் போக்காக ஒரு சித்தாந்தமாக மாத்திரம் இப்போது இல்லை, அது இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் எதார்த்தமாக இன்றைக்கு நிலவுகிறது. மதவாத பாசிசம் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருப்பதன் மூலம் அது இந்தியாவை சீர்குலைக்கப் பார்க்கிறது. இந்திய வகை பாசிசம், அதனுடைய தன்மைகள், வளர்ச்சி, அதை எப்படி எதிர் கொள் வது? எதிர்த்து எப்படி போராடுவது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

இகக(மாலெ) தஞ்சையில் 24.7.2022ல் நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!! என்ற முழக்கத்துடன் 24.7.2022 அன்று தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, காவேரி திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. தஞ்சை நகரத்திலும் மாநாட்டு மண்டபத்திலும் செங்கொடிகள் செங்கதிரொளியினூடே பறக்க, தோழர்கள் சந்திரகுமார் சந்திரசேகர்-சுப்பு பெயரிடப்பட்ட அரங்கத்தில் மாலை 3.30 மணிக்கு கோவை நிமிர்வு கலைக்குழுவினரின் தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. மாநாட்டிற்கு இகை(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் தலைமை தாங்கினார்.

புரட்சிகர இளைஞர் கழகம் சேலம் மாவட்ட பேரவை

புரட்சிகர இளைஞர் கழகத்தின் சேலம் மாவட்ட பேரவை 10.7.2022 கெஜ்ஜல்நாய்க்கன்பட்டி, வீராசாமிபுதூரில் நடைபெற்றது. ஜி.ஜெயராமன், ஆர்.மணீஸ்வரன், ஏ.பிரித்விராஜ் ஆகியோர் தலைமையேற்று பேரவையை நடத்தினர். ஜி.சுந்தர்ராஜன் வேலை அறிக்கை முன்வைத்தார். ஆர்ஒய்ஏ மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.தனவேல், இகக(மாலெ) சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் கோ. மோகனசுந்தரம், ஏஐசிசிடியூ மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், அய்சா மாவட்ட அமைப்பாளர் ராகுல், இக்க(மாலெ) பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொ.அன்பு ஆகியோர் உரையாற்றினார்கள்.