கன்னியாகுமரி மாவட்டத்தின் ரப்பர் தோட்டங்களின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது. ஜான், ஜோசப் மர்பி என்ற ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1902 ஆம் ஆண்டு அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் கோட்டய மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்ளை அறிமுகப்படுத்தி பயிரிட்டனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிர்கள் பயிரிடப்பட்டன. இத்தோட்டத்தில் சுமார் லட்சம் பேர் தொழிலாளர்களாகப் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.
தமிழ்நாட்டில் விசைத்தறி முக்கிய வேலை அளிக்கும் தொழிலாக உள்ளது. குறிப்பாக நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரியும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு செலவானியையும் வேலைவாய்ப்பையும் உரு வாக்கித் தருவதால் தமிழக அரசு விசைத்தறி உற்பத்திக்கு மட்டுமே என சில துணி ரகங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் பாரம்பரிய தொழிலான கைத்தறி உற்பத்திக்கு என்று சில ரக துணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்தொழிலை பாதுகாப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக அரசு விசைத்தறிக் கூடங்களுக்கென இலவசமாக மின்சாரமும் வழங்குகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு மாணவர்கள் பெரியார் படத்தை தாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைத்திருந்தார்கள் என்பதற்காக சங்கிகள் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் குண்டர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கினார்கள். பல்கலைக் கழகத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். பெரியார், அம்பேக்கர், மார்க்ஸ் படங்களை இழிவுப்படுத்தியதனைக் கண்டித்து பிப்ரவரி 25ம் தேதி அகில இந்திய மாணவர் கழகம் (அய்சா) சார்பாக மாணவர்கள் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், அசபுல்லாகான், பகத் சிங், பூலே, சாவித்திரிபாய், அயோத்திதாசர், தோழர் சந்திரசேகர் போன்றோரின் படங்களுடன் பேரணி நடத்தினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வடக்கு தாதநாயக்கன் பட்டி கிராமத்தில், பழனி வடக்கு மலைத் தொடர் அடிவாரத்தில், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த அமராவாதி வனப்பகுதிக்கு அருகில், 250 ஏக்கர் பரப்பளவில், வருடத்திற்கு 2,191 டன் வெடி பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தயாரிக்கும் சுவா எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆலையைத் துவக்க பல்வேறு அரசு முகாமைகள் அனுமதி அளித்துள்ளன. தனியார் கார்ப்பரேட் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதிக்கு மிக அருகில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் மலை, சமணர் குகைகள், வரலாற்றுச் சின்னங்கள், அகழ்வாய்வு தளங்களும் உள்ளன.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் கொடூர படுகொலை நிகழ்ந்த போது, குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த மோடியின் பாத்திரம் குறித்து பிபிசி (பிரிட்டிஷ் பிராட்கேஸ்ட் கார்ப்பரேஷன்) "இந்தியா: மோடி பற்றிய கேள்வி” என்று இரண்டு பகுதிகளாக தயாரித்திருக்கும் ஆவணப்படத்தின் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று ஒளிபரப்பப் பட்டது. அந்தப் படம் இந்தியாவில் ஒளிபரப்பப் படவில்லை. மோடி அரசாங்கம் இந்தப் படம் சம்பந்தமான ட்விட்டர் பதிவுகள், இணைப்பு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விடுமாறும் யூ ட்யூப் நிறுவனம் அந்த காணொளிகளை அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வதை நிறுத்திடு மாறும் கேட்டுக் கொண்டது.
நவதாராளவாத கொள்கை அமுலாக்கத்தின் விளைவுகள் என்ன, தொழிலாளர் சட்டங்களை ஒழித்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம். தொழிலாளர் சங்கம் அழைக்கப்படாத தொழிலாளர் அமைச்சர்களின் திருப்பதி மாநாட்டில் நடந்தது அதுதான். தொழிலாளர் சீர்திருத்தங்கள் அமுலாக்கப்பட்ட மாநிலங்களில் தொழில்துறை வளர்ந்து இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறது. ஊதியம் அதிகரித்து இருக்கிறது என்றெல்லாம் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு, தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து தொகுப்புச் சட்டம் உருவாக்கியது சரிதான் என நிறுவப் பார்க்கிறது.
"ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்" என்ற இந்தக் கருத்தரங்கத் தலைப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும். ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு ஆதாரமான ஊதியத்தில் கை வைக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய தொழிலாளர் மாநாடு என்ற அமைப்பைக் கூட்டவே இல்லை. சமீபத்தில் திருப்பதியில் இந்திய தொழிலாளர் மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எந்த தொழிற்சங்கமும் அழைக்கப் படவில்லை. பதிலாக அவர்கள் எல்லா தொழிலுக்கும் பொதுவான தேசிய தரைமட்டக் கூலி என அறிவித்திருக்கிறார்கள். குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகவும் குறைவான ரூபாய் 176 என்ற சொற்பத்தொகையை கொடுத்தால் போதும் என்கிறார்கள்.
'ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு நீதான அனுப்பின உம் பையன'. காலேஜ் படிக்கும் தன் மகன் அப்பார்ட்மெண்ட் செப்டிக் டேங்க் கழுவச் சென்று விஷ வாயு தாக்கி இறந்து விட்டான் என்பதை நம்ப முடியாமல் என் மகனைக் காட்டு, அவனைக் காட்டுங்கள் என்று கதறும் தூய்மைப் பணியாளரான தாயிடம் அரசாங்க ஆஸ்பத்திரியில் அடாவடியாகப் பேசுகிறது போலீஸ். மலக் குழி மரணம். புகார் வாங்கக் கூட மறுக்கும் போலீஸ், கம்ப்ளைண்ட் எதுக்கு? என்ன பண்ணப் போறீங்க? எதுவும் நடக்காது. பேசி முடிச்சா கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்கிறது. இன்னொரு பக்கம், மாநகராட்சி அலுவலகம்.
டிசம்பர் 5: 75 நாட்கள் மர்ம சினிமாவின் இறுதிக்காட்சி சோகமாக முடிந்து போனது. டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா இறந்து விட்டார். அவரது மரணத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள "அம்மாவின் ஆட்சியே" விசாரணை ஆணையம் அமைத்தது! ஆனால் திமுக ஆட்சியிலும் ரகசியம் வெளிவரவில்லை. எம்ஜிஆர் இறந்தபிறகு இரண்டு துண்டுகளான அதிமுகவை வெற்றிகரமாக ஒன்றுபடுத்தி, இறப்பு வரை தனது சுருக்குப்பையில் வைத்திருந்த 'இரும்புப் பெண் மணியால்' அவரது இறப்புக்குப்பிறகு நான்கு துண்டுகளானதை அவரால் 'வானுலகத்திலிருந்து' வேடிக்கை தான் பார்க்கமுடிந்தது!
புத்தாண்டின் வருகையானது பொதுவாக புதிய இலக்குகளை அமைத்துக் கொள்வதற்கும் புதிய தீர்மானங்களை வகுத்துக் கொள்வதற்கு மான நேரமாகும். ஆனால் மோடி அரசாங்கத்திற்கோ அது உண்மையில், பழைய வாக்குறுதிகளை குப்பைத் தொட்டியில் போடுவதற்கும் புதிய தொடு எல்லைகளுடன் புதிய கதை யாடலை தொடங்குவதற்குமான வழியாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)