சிபிஐ எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் சிறப்புப் பேட்டி பிடிஐ யின்நாடாளுமன்றத் தெரு என்ற சேனலில் வெளிவந்தது)

(ஆங்கிலத்தில் பேட்டி:  https://youtu.be/lLnosZxjpXw)

தமிழ் வரி வடிவம்சி. மதிவாணன்

பேட்டியாளர்:      திபங்கர் ஜிபிடிஐயின் நேர்காணலுக்கு வந்தமைக்கு நன்றிதங்களின் கட்சி  பற்றியும் கட்சியில் நீங்கள் பயணித்த பாதை குறித்தும் சற்று பேசுவோமாஉங்கள் கட்சி லெனினின் பிறந்த நாளில் நிறுவப்பட்டது. நீங்கள் கட்சியோடு தொடர்பு கொள்வது எப்படி நிகழ்ந்தது?

திபங்கர்:

லெனின் பிறந்த நாளில்தான் கட்சி நிறுவப்பட்டது. ஆனால்மே மாதம், 1967 ஆம் ஆண்டு நிகழ்ந்த நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியின் விளைவாக 1969ல் கட்சி அமைப்பாக்கப்பட்டதுகட்சி என்ற ஒன்று வேண்டுமாவேண்டாமா? கட்சிக்கான காலம் கனிந்துவிட்டதாஇல்லையா? ஒரு விதமான தளர்வான ஒருங்கிணைப்பு போதும்தானேஎன்ற விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது கட்சி நிறுவப்பட்டது.

மாணவனாக இருந்தபோது, 1979-1980 காலத்தில் கட்சியோடு நான் சேர்ந்து பணியாற்றத் துவங்கினேன். ஆனால்அதற்கு ஒரு பின்னணி இருந்ததுஎனது தந்தை ரயில்வேயில் பணியாற்றிக்கொண்டிருந்தார்அப்போது (மேற்கு வங்கத்தின்) டார்ஜிலிங் (மாவட்டத்தில்நக்சல்பாரி எழுச்சி நடந்துகொண்டிருந்ததுஅப்போது நாங்கள் அருகாமையில் இருந்த அலிப்பூர்துவாரில் இருந்தோம்இப்போது அலிப்பூர்துவார் தனி மாவட்டம் ஆகிவிட்டது. 1967ல் நக்சல்பாரி நிகழ்ந்துகொண்டிருந்தபோது நான் ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்அப்போது  பெருமளவு சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்கள். அதில் நக்சல்பாரி முழக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்அவை எனக்குள் பல கேள்விகளை எழுப்பின.   எதுவும் எளிதில் மனதில் பதிந்துவிடும்அதனால்நான் என் தந்தையோடு  நிறைய விவாதம் செய்தேன்.

பேட்டியாளர்:

என்னஅந்த வயதிலா?!

திபங்கர்:

ஆமாம்ஐந்து, ஆறுஏழுஎட்டு வயதுகளின்போது நான் பள்ளி செல்லும்போதெல்லாம் சுவற்றில் எழுதியிருந்தவற்றைப் படிப்பேன்அந்த பெரிய சுவர் எழுத்துகள் 70களை  விடுதலையின் பத்தாண்டுகள் ஆக்குவோம் என்று முழங்கின. 1972ல் இந்தியா தனது சுதந்திர தின வெள்ளிவிழாவை நடத்திக்கொண்டிருந்தது. அப்படியிருக்கும்போது இந்தியாவை எதிலிருந்து விடுவிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுநாம் விடுதலை பெற்ற நாட்டில்தானே இருக்கிறோம் என்று நான் யோசித்தேன்மறுபடியும் ஏன் இந்தியாவை விடுதலை செய்ய வேண்டும்? என் தந்தை என் கேள்விகளை எதிர்கொண்டு பதில் சொல்வார்எங்களுக்கு இடையே அரசியல் விவாதம் நடக்கும்அரசியல் விவாதம் செய்யக்கூடாது என்று என்னை அவர் ஒருநாளும் தடுத்ததில்லை.   இவ்வாறான அரசியல் விவாதங்களை நாங்கள் என் சிறுபிராயத்தில் செய்துவந்தோம். அந்த நினைவு எனக்கு இருக்கிறது.

அதன்பின்பு 1974ல் நரேந்திரபூர் ராம்கிருஷ்ண மிஷனுக்கு நான் வந்து சேர்ந்தேன்அது ஓர் உறைவிடப் பள்ளியாகும்அங்கே சூழல் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்ததுபத்திரிகைகள் கிடைப்பதில்லைஅவசர நிலை முடிவுக்கு வந்த பின்தான் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவந்தது.

1979ல் நான் இந்திய புள்ளியியல் கழகத்தில் சேர்ந்தேன்என் வாழ்வைத் தீர்மானிக்கும் ஆண்டாக 1977 இருந்ததுஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது. நாம் நமது ஜனநாயகத்தை மீட்டெடுத்துவிட்டோம் என்ற உணர்வு அப்போதிருந்தது. அரசியல் கைதிகளை மீட்டெடுக்க வேண்டும் என்று இயக்கம் நடந்தது. பியுசிஎல்பியுடிஆர் என்று சிவில் உரிமை இயக்கங்களும், ஏகப்பட்ட சுற்றுச்சூழல் இயக்கங்களும் நாங்கள் படித்த புள்ளியியல் கழகத்தில் நடைபெற்றனஅது மிகவும் சிறிய இடம்சிறிய அளவிலான மாணவர்களே இருந்தார்கள். அங்கே இடதுசாரிதாராளவாத வகைப்பட்ட ஒரு சூழல் இருந்ததுஅப்போதே நான் முடிவு செய்துவிட்டேன்... இதுபோன்ற ஒன்றைத்தான் நான் செய்யப் போகிறேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது.

பீகாரிலிருந்து ஏகப்பட்ட செய்திகள் வந்துகொண்டிருந்தன. தோழர் நாகபூஷன் பட்நாயக்கின் விடுதலைக்காக நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். சில  அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்தோழர் நாகபூஷன் விடுதலைக்காக ஒரு கமிட்டி இயங்கிக்கொண்டிருந்தது. இப்படித்தான் அப்போது வாழ்க்கை இருந்ததுஅதாவது நான் ஒரு மாணவனாக இருந்தபோதும், 79 முதல் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தேன். 1984ல்  எனது பட்டத்தைப் பெற்றேன்ஆனால்அந்த சமயத்தில் நான் கட்சியின் முழு நேர ஊழியன் போலச் செயல்பட்டுக்கொண்டிருந்தேன்.

பேட்டியாளர்:

ஓகேசுவையாகத்தான் இருக்கிறதுஇப்போது நீங்கள் சிபிஐஎம்எல்லில் இருக்கிறீர்கள். உங்கள் கட்சிக்குஎம்பிகள் இருக்கிறார்கள்ஆனால், நீங்கள் மூன்று எம்பிகளைப் பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால்நாளந்தாவில் தோற்றுவிட்டீர்கள்

திபங்கர்

ஆமாம்அது உண்மைதான். நாங்கள் கொடர்மாவிலும் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால்தேர்தல் முடிவுகள் ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தன. சொல்லப் போனால்ஏமாற்றமளித்தனநாங்கள் அதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்நாங்கள்இந்தியாஅணியின் சார்பில்இடங்களில் போட்டியிட்டோம்அவற்றில்பீகார்ஒன்று ஜார்கண்ட்.

பேட்டியாளர்:

இருபதாண்டுகள் கழித்து  நீங்கள்எம்பி இடங்களில் ஜெயித்துள்ளீர்கள்

திபங்கர்:

ஆமாம்.  2 எம்பிகளையும் எப்படி மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவது என்று நாங்கள் பரிசீலித்துக்கொண்டுள்ளோம்இரண்டு எம்பிகளும் இரண்டு முறை எம்எல்ஏக்களாக பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏறக்குறைய பத்தாண்டுகள் அனுபவம் இருக்கிறது. இருவருமே விவசாயிகளின் தலைவர்கள்தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தில் கடந்தஅல்லதுஆண்டுகளாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்எனவேஇது ஒரு வகையில் பார்த்தால் விவசாயிகள் இயக்கத்தின் வெற்றியாகும்எனவே, நாங்கள்  அந்த அரங்கில் எதையாவது செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்ஆனால்பீகாரின் விவசாய இயக்கம் பஞ்சாப்ஹரியாணாமேற்கு உபியின் விவசாயிகள் இயக்கத்திலிருந்து மாறுபட்டதுநாங்கள் இது விஷயத்தில் ஏதேனும் செய்வோம்.

பேட்டியாளர்:

நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியின் பிரதிநிதிகள் மறுபடியும் நுழைந்திருக்கின்றனர்மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கும்போது இது நடந்துள்ளதுஉங்களின் தோழமை கட்சியான சிபிஐ எம் கேரளாவில் ஆட்சியில் உள்ளனர்இருந்தபோதும், ஒன்றும் பெரியதாகச் செய்துவிட முடியவில்லைஇப்படியான நிலையில் இடது முன்னணி இருப்பதற்கான சரியான காரணம் என்னமற்ற இடதுசாரி கட்சிகளுடன் ஒப்பிடும்போது உங்கள் அணுகுமுறை எவ்வாறு மாறுபட்டதாக இருக்கிறது?

திபங்கர்:

இந்த கேள்வி பலரும் கேட்கும் கேள்விதான். பல சமயங்களிலும் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.   ஆனால்கேள்விக்கான பதிலைச் சொல்வது மிகவும் கடினமானது. (சிரிக்கிறார்ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலைமை உள்ளதுசரியாஉதாரணமாக மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள்மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சியில் இருந்தபோது நாங்கள் ஒருபோதும் அதில் அங்கம் வகிக்கவில்லைநாங்கள் எங்களின் சுதந்திரத்தைப் போற்றி வந்தோம். சுதந்திரமான இடது கட்சியாகச் செயல்பட்டுசில பிரச்சனைகளில் அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டோம்சில பிரச்சனைகளின் தன்மையை ஒட்டி இடது முன்னணியோடு ஒத்துப்போகாமல் முரண்பட்டோம்சிங்கூர்நந்திகிராமம் பிரச்சனையோடு வங்கத்தில் சரிவு துவங்கியதுஆனால்எப்படி அதிலிருந்து மீள்வது என்பதை முறையாகக் கையாளவில்லைஅனேகமாகஅவர்கள் மேற்கு வங்கத்தில் பெற்ற வெற்றியின் தன்மையும்நீண்ட காலமாக வெற்றிமுகத்தில் அவர்கள் இருந்ததும்அவர்கள்  தோல்வியிலிருந்து திரும்புவதை மிகுந்த சிரமமாக்குகிறது போலும்.

ஆனால் கேரளாவில் நிலைமை வேறுஅங்கே ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி மாற்றி அரசாங்கங்கள் அமைந்தனஆனால், இந்த முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். இருந்தாலும் கேரளாவும் வங்கத்தின் வழியில் செல்லாது என்று நினைக்கிறேன். திரிபுராவும் கூட வங்கத்தைப் போன்றே உள்ளதுஅங்கே இடதுசாரிகளை பிஜேபி முந்திச் செல்கிறதுஇடதுசாரிகள் மீண்டு வருவது கடினமானதாக இருக்கிறது.

அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களின் அரசியலின் பெரும்பகுதி அதிகாரத்தை மையமாகக்கொண்டவையாக மாறிவிட்டதுஅவர்கள் கேரளாவில்என் நினைவு சரியென்றால், 1957ல் துவங்கினார்கள்அவர்களின் ஆட்சியை நீடிக்க விடாது செய்துவிட்டனர். அதுபோன்ற ஒன்றுதான், 1960களின் நடுப்பகுதியில் அல்லது 67ல்   இரண்டாவது முறையாகவும் நேர்ந்ததுநீண்ட காலம் ஆட்சி நடத்த முடியவில்லைஎனவேஅரசாங்கம் நிலையான ஒன்றாக இருப்பது சிபிஐ எம்முக்கு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்மேற்கு வங்கத்தில் இருந்த நிலைமைகள் காரணமாக அவர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவும் முடிந்தது. இப்படியாகஆட்சியில் இருப்பது முதன்மையானதாகவும், போராட்டங்கள் இரண்டாம் பட்சமாகவும் அவர்களுக்கு மாறிவிட்டது.

உதாரணமாக சிங்கூர்நந்திகிராம் பிரச்சனையைப் பாருங்களேன். சமூகத்தை உற்று நோக்கும் யாருக்கும்பெரிய தொழில் ஒன்று வரும் என்பதற்காக நிலத்தைக் கையகப்படுத்துவது என்ற கருத்தை விவசாயிகள் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்வதில்லை என்பது தெரிந்துவிடும்எனவேகண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்கும் எந்தக் கட்சியும்தான் செய்த முடிவை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எடுத்திருந்த முடிவை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால்அவர்கள் தாங்கள் எடுத்த முடிவை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்மக்கள் சொல்வது தவறு என்றும் தாங்கள் எடுத்த முடிவு சரியானது என்றும் கருதினார்கள்.

எங்களைப் பொறுத்தவரைநாங்கள் எங்கேயும்ஒருபோதும் அதிகாரத்தில் இருந்ததில்லை. எங்கள் கட்சி மக்களைச் சார்ந்து நிற்பதாக இருக்கிறதுபோராட்டங்களை நடத்தும் கட்சியாக இருக்கிறதுஎந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு நல்ல கொள்கை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனை அமலாக்கக் கூட நெருக்கடி கொடுப்பது தேவையானதாக இருக்கிறது. உதாரணமாக நான் உங்களுக்குச் சொன்ன வாக்களிக்கும் உரிமையை எடுத்துக்கொள்ளுங்கள்அரசியல் சட்டத்தின்படி வாக்களிப்பு அடிப்படை உரிமையாகும். ஆனால்அது நடைமுறையில் இல்லைஎனவேஎந்த ஒரு உரிமையை நீங்கள் பெறுவதற்கும் போராடியாக வேண்டும்மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால்வாழ்க்கையில் முன்னேற்றம் வர வேண்டும் என்றால்ஒவ்வொரு அங்குலத்திலும் போராடியாக வேண்டும்.

எனவேஎங்களின் அணுகுமுறை மக்களை மையப்படுத்தி நிற்பதாகவே எப்போதும் இருந்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடாக இருக்கிறதுஇருந்தபோதும்நாங்கள் முயற்சியெடுத்து எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குச் சேர்ந்து செயல்பட முயற்சிக்கிறோம். இப்போதுஇந்த தருணத்தின் நிலைமை இதற்கு முன்பு இருந்தது இல்லை.

உதாரணமாகஇந்தியா கூட்டணி போன்ற ஒன்றை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. தற்போது ஆர்ஜேடி கட்சியோடு நாங்கள் மேற்கொண்டுள்ள சரிக்கட்டல் பற்றிஆண்டுகளுக்கு முன்பு யோசித்துப் பார்ப்பது கூட சாத்தியமில்லை. எனவேஇது காலத்தின் தேவைஎனவேஇடது தளத்திற்கு வெளியே உள்ளகருத்தியல் ரீதியில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட கட்சிகளோடும் நாங்கள் ஊடாட  முயற்சிக்கிறோம்இது எங்களுக்கு புதிய அனுபவம்இருந்தாலும்இந்த விஷயத்தில் ஐக்கியப்பட்ட இடதுகள் ஒரு மாறுபட்ட பாத்திரத்தை ஆற்றியாக வேண்டும்எனவேநாங்கள் முயற்சி எடுப்போம்பிற இடதுசாரி கட்சிகளும் கூட மீண்டு வரக்கூடும் என்றும் நாங்கள் கருதுகிறோம்இடதுசாரிகள் 2004ல் நாடாளுமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்டிருந்தனர். அது இப்போது ஒன்பதாகச் சரிந்துவிட்டதுஇது குறிப்பிடத்தக்கச் சரிவாகும்.

பேட்டியாளர்:

நீங்கள் சரிவைப் பற்றி பேசினீர்கள். 60லிருந்துஎன்பதாகமிகவும் கீழே இறங்கிவிட்டதுகேரளாவில் சிபிஐ எம் வென்ற ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நீங்கள் உட்பட இடதுகள் அனைவரும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசையும் பிற கட்சிகளையும் சார்ந்துள்ளீர்கள்சார்ந்திருப்பது என்ன விதமான தாக்கங்களை,கருத்தியல் அடிப்படை உட்பட ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

திபங்கர்:

நான் அதனை சார்ந்திருப்பது என்று பார்க்கவில்லை. மாறாக ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது என்று பார்க்கிறேன். எங்களின் கூட்டணியில் உள்ளவர்கள் எந்த அளவு லாபம் அடைந்திருக்கிறார்களோ அந்த அளவுக்கு நாங்களும் பலன் பெற்றிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால்அவர்கள் கூடுதலான பலன்களைப் பெற்றுள்ளார்கள். தேர்தலில் வாக்குகள் ஒரு பக்கமாகக் குவிவது அதிகரித்துள்ளது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்குலட்சம் அல்லதுலட்சம் வாக்குகளைப் பெற வேண்டும். ஒரு சுதந்திரமான இடதுசாரி கட்சிக்குஅல்லதுலட்சம் வாக்குகள் பெறுவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கலாம். அனேகமாக அது கேரளாவில் அல்லது எங்கள் கட்சிக்கு வேறு சில மாநிலங்களில் சாத்தியமானதாக இருக்கக் கூடும்எனவேகூட்டணி உருவாக்குவது இந்த காலத்தின் தேவையாக இருக்கிறதுஎல்லாக் கட்சிகளுக்கும் இப்போது அது தேவையானதாக இருக்கிறது. அது ஒரு நிரந்தரமான சார்பு நிலை என்று சொல்ல வேண்டிய அளவுக்கு இருக்கிறது. எனவேதான்இந்த காலகட்டத்தை முன்னெப்போதும் இல்லாத  ஒன்று என்று குறிப்பிடுகிறேன். இந்தியா இதுபோன்றதொரு சூழலை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. எந்தவொரு கட்சியும்இடதுசாரி சோசலிசக் கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரிஇதுவரை எழுந்திராத இந்த கேள்விக்கு வழக்கத்துக்கு மாறான பதில் ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

பேட்டியாளர்:

கூட்டணி அமைப்பதும் எளிதான ஒன்றுதான். கூட்டணியில் உள்ளவர்கள் மையத்தில் உள்ளவர்களாகவோ அல்லது மையத்திற்கு இடது பக்கத்தில் உள்ளவர்களாகவோ இருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள்

திபங்கர்:

கருத்தியல் நெருக்கத்தைக் காட்டிலும், அனேகமாகஒத்துப்போகும் சமூகத் தன்மை கூடுதலாக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.   உதாரணமாக, எங்களின் வலு அதிகமாக இருக்கும் பீகாரையும் ஜார்கண்ட்டையும் பாருங்களேன். எங்கள் கட்சி நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம்தான் வளர்ந்தது. அந்த பத்தாண்டுகளின்போது காங்கிரஸ் ஆதிக்கத்தில்  இருந்ததுஎனவே, அதுதான் அரசியலில் பிரதானமான நிலப்பிரபுத்துவ சக்தியாகவும் இருந்தது. எனவேநாங்கள் காங்கிரசுக்கு மிகப் பலத்த அடிகளைக் கொடுத்தோம். இருந்தபோதும் எங்களுக்கு மிகப் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடவில்லை. ஏனென்றால்நாங்கள் மிகவும் ஏழையான மக்கள் பிரிவினரின் பிரதிநிதியாக இருந்தோம்ஆனால், நாங்கள் அரசியல் நுழைவாயில் ஒன்றைத் திறந்துவிட்டோம்அதன் வழியே பிற கட்சிகள் உள்ளே நுழைந்தனர்உதாரணத்துக்கு ஜனதா தளத்தைச் சொல்லலாம்நீங்கள் 70களின் துவக்க காலத்தைப் பார்த்தீர்கள் என்றால்லாலு யாதவ் போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்று மக்கள் சொல்கிறார்களோ அதைத்தான் நாங்களும் செய்து வந்தோம்லாலு மக்களுக்காக குரல் கொடுத்தார் என்று மக்கள் சொல்லி வந்தார்கள்லாலு பீகார் மக்களுக்கு இதனைக் கொடுத்தார் என்று சொன்னார்கள். ஆனால், 70களில் அதே கீழ்த்தட்டு மக்கள் தங்களின் கௌரவத்துக்காக எங்களின் பதாகையின் கீழ் போராடிக்கொண்டிருந்தார்கள்; மனித உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டிருந்தார்கள். அதாவதுநடுத்தட்டு விவசாயப் பிரிவுகளை உள்ளடக்கிய சாதிகளைச் சேர்ந்த ஓபிசிக்களும் இபிசிக்களும் போராடிக்கொண்டிருந்தனர்எங்களின் அடித்தளமாக தலித்துகளும் இபிசிக்களின் ஒரு பிரிவினரும் இருந்தனர். இப்படியாகசமூக ரீதியான பொருத்தப்பாடு இருந்தது. இவை ஒன்றுக்கு ஒன்று அனுசரித்துப் போகும் சமூகப் பிரிவினராக இருந்தனர். உதாரணமாகஆர்ஜேடியின் சமூக அடித்தளம் கடந்த சில ஆண்டுகளில் சுருங்கி வந்ததுமக்கள் இப்போது இரண்டு சமூகங்கள் அல்லது இரண்டு சாதிகள் என்று சொல்கிறார்கள்எனவேஒவ்வொருவரும் பலன் பெறும் விஷயத்தை நாங்கள் அரங்கிற்குள் கொண்டு வந்தோம்கருத்தியல் வார்த்தைகளில் சொல்வதானால்நீங்கள் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவீர்கள் என்றால் நீங்கள் யாராக இருந்தாலும் இந்தியா கூட்டணியில் இருக்க முடியும்.

உதாரணமாக சிவசேனா இந்தியா கூட்டணியில் இருக்கிறது. கருத்தியல் ரீதியில் பார்த்தால் மகாராஷ்டிராவின் சிவசேனா இந்துத்துவா கட்சியாக இருந்தபோதும்அது அரசியல் சட்டத்திற்கு அர்ப்பணிப்பு உள்ளதாக இருக்கும்வரை, ஜனநாயகத்தைக் காப்பதாக இருக்கும்வரை அது இந்தியா கூட்டணியில் இருப்பதில் பிரச்சனையில்லை. எங்களைப் பொருத்தவரை நாங்கள் மகாராஷ்டிராவில் பெரிய அளவில் இல்லை. எங்களுக்கும் அவர்களுக்கும் நேரடி ஊடாடலுக்கு வாய்ப்பில்லை. ஐக்கியத்துக்கான மைய கருத்தாக இருக்கும் அரசியல் சட்டத்தைக் காப்போம் என்பதில் ஒற்றுமை இருக்கும் என்றால் நாம் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற முடியும்.

 

(தொடரும்)