ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ்யுடியுசியின் 10ஆவது அகில இந்திய மாநாட்டில் ஏஐசிசிடியுவின் வாழ்த்துரை.

  ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் -யுடியுசி தனது 10ஆவது அகில இந்திய மாநாட்டை சேலம் மாநகரில் செப்டம்பர் 1, 2 தேதிகளில் நடத்தியதுதோழர் ஹித்திஷ் கோஸ்வாமி நினைவரங்கத்தில் (சேலம் மாநகராட்சி பல்நோக்கு அரங்கம்நடைபெற்ற மாநாட்டு துவக்க அமர்வில் ஏஐசிசிடியு சார்பில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் சங்கரபாண்டியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்இந்நிகழ்வில் ஆர்எஸ்பி கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் மனோஜ் பட்டாச்சார்யா  தொடக்க உரையாற்றினார்தொமுசஐஎன்டியுசிசிஐடியுஹச்எம்எஸ்ஏஐயூடியூசி ஆகிய மைய சங்கத் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றினார்கள்யுடியுசி பொதுச் செயலாளர்நாடாளுமன்ற உறுப்பினர்தோழர்பிரேமச்சந்திரன்  மாநாட்டில் கலந்து கொண்டார்மாநாட்டு மலரை ஆர் எஸ் பி யின் முன்னாள் தலைவர் தோழர்.பாபு திவாகரன் வெளியிட்டார்முன்னதாக ஏ ஐ சி சி டி யு சார்பில் மாநாட்டு மலருக்கான வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டிருந்ததுமாநாட்டில் ஏ ஐ சி சி டி யு தோழர்கள் பால்ராஜ்முருகன்கோவிந்தராஜ், வேல்முருகன்நடராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 தோழர் சங்கர பாண்டியன்சேலம் சிறை தியாகிகளை நினைவு கூர்ந்து துவங்கிய தனது வாழ்த்துரையில்,

   தேசிய ஜனநாயக கூட்டணியின் மோடி 3.0 ஆட்சி பலம் இழந்திருந்தாலும் தொழிலாளர் விரோதகார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அமலாக்குவதில் அதே மும்முரம் காட்டி வருகிறதுநாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், கடும் விலைவாசி உயர்வு பற்றி மோடியின் சுதந்திர தின உரையில் எதுவும் இல்லை. மாறாகமதவாதபொது சிவில் சட்டம்”, கூட்டாட்சிக்கு எதிரானஒரு தேசம்ஒரு தேர்தல்” ஆகியவையே இடம்பெற்றிருந்தனநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த பட்ஜெட்டிலும் மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் எதுவும் இடம்பெறவில்லைஅதுபோல்விவசாயிகளின் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாககார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, கடன் தள்ளுபடிதேசத்தின் சொத்துக்களை கையளிப்பது  ஆகியவையே இடம்பெற்றிருந்தன.

   மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள மின்சார திருத்த சட்டம் மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதையும் இலவச மின்சாரத்தைமின்சார மானியத்தை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டதுமின்வாரிய ஊழியர்கள்விவசாயிகள், சிறுநடுத்தர தொழில் முனைவோர்பொதுமக்கள் இணைந்து அதை முறியடிக்க வேண்டும்.

   மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் UPS ஒரு ஏமாற்றுத் திட்டமேபழைய ஓய்வூதியத் திட்டம் OPS ஐ மீண்டும் கொண்டுவரும் வரை மத்தியமாநில அரசு ஊழியர்களின் போராட்டம் ஓயாது.

  நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிரான, தொழிற்சங்க உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கும் விதத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நாம் பார்க்கத் தவறக் கூடாது. இந்திய தொழிற்சங்க இயக்கம் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களையும் தீவிரப்படுத்த கடமைப்பட்டுள்ளது.

  நாடு தழுவிய அளவில் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கௌரவமான ஊதியம், கண்ணியமான பணி நிலைமைகள்தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றோடு ஏகாதிபத்திய போர் மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மதசார்பின்மைக்காகவும்அமைதிக்காகவும் ஏஐசிசிடியுயுடியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களோடு இணைந்தும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.

யுடியுசியின் மாநில பொதுச் செயலாளர் தோழர். சேக்கிழார் நன்றி கூறினார்.