டிஎம் கிருஷ்ணா - கலை - இலக்கிய விடுதலைக் குரல்!

கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணாவிற்கு 2024 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி பட்டம் மியூசிக் அகாடமியால் வழங்கப்பட இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அவருடைய "ஆற்றல்மிகு குரலுக்கான" அங்கீகரிப்பாக, கர்நாடக இசைக் கலையை "அதன் இறுக்கமான சட்டகங்களுக்குள் வைத்திருப்பதற்கு மாறான பரிசோதனை முயற்சிகளுக்காக", மேலும், கர்நாடக இசையை "சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக" பயன்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என மெட்ராஸ் மியூசிக் அகாடமி தலைவர் என் முரளி குறிப்பிட்டிருந்தார். 

 

நீண்டகாலமாக தமிழக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

நீண்டகாலமாக தமிழக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையை கோரி பல தலைவர்களின், வேண்டுகோள்களும், பல ஜனநாயக அமைப்புகளின் ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. குழந்தையாக இருந்த போது தந்தையைப் பிரிந்தவர்கள், இளம் மனைவியைப் பிரிந்தவர்கள், மகனையும் சகோதரனையும் பிரிந்தவர்கள் என அவர்களின் கண்ணீர்க் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்கள் இல்லாத அந்த வீடுகளில், வாழ்வாதாரத்திற்காக பெண்கள் வேலைக்கும் சென்று, குழந்தைகள் வளர்ப்பையும் செய்து பெண்கள் அவதியுறுகிறார்கள்.

காலனியாதிக்க மற்றும் அடிமைத்தன அடையாளத்திற்கு எதிராக நம் கொடியை உயரத்தில் பறக்கச் செய்வோம்!

செப்டம்பர் 8 அன்று, இந்தியா கேட்டில் புதிய கர்தவ்ய பாதையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ராஜ பாதை (ஆங்கிலத்தில் கிங்ஸ்வே என்பதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) என்பது அடிமைத் தனத்தின் ஒரு அடையாளமாக இருந்தது என்று கூறினார். அதேபோல், கடந்த வாரம் ஐஎன்எஸ் விக்ராந்த் துவக்க நிகழ்வின் போது மோடியினால் வெளியிடப்பட்ட இந்திய கப்பற்படை கொடியில் ஏற்கனவே இருந்த புனித ஜார்ஜின் சிலுவை அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு புதிய சின்னம் சேர்க்கப்பட்டிருந்தது.

முட்டுக்கொடுக்கும் மூன்றாம் தூண்கள்

ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்கள் சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை. நான்காவது தூண் ஒன்றும் இருக்கிறது. அது பத்திரிகை மற்றும் ஊடகம். இந்த நான்கும் ஒன்றை இன்னொன்று கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக தனித்து இயங்க வேண்டும். இல்லையென்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நான்கு தூண்களில் மூன்றாவது தூணான நீதித்துறையை மட்டும்தான் எளிய மக்களில் இருந்து எல்லாரும் தங்கள் பிரச்சனை களின் தீர்வுக்கான கடைசிப் புகலிடமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)

இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)
23 மாநில நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில 23வது மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இக்க(மாலெ) மாநிலக் கமிட்டி சார்பில் மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் கோ. பழனி தலைமையில் மாநில கமிட்டி ல் உறுப்பினர்கள் எஸ். புருஷோத்தமன், ஆர்.விஜயா, புதுச்சேரி நகரச் செயலாளர் எஸ் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) சார்பாக தோழர் கோ.பழனி மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.

புதுச்சேரி எல் அண்டு டி தொழிலாளர் மறியல் போராட்டம்

ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே