காலனியாதிக்க மற்றும் அடிமைத்தன அடையாளத்திற்கு எதிராக நம் கொடியை உயரத்தில் பறக்கச் செய்வோம்!

செப்டம்பர் 8 அன்று, இந்தியா கேட்டில் புதிய கர்தவ்ய பாதையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ராஜ பாதை (ஆங்கிலத்தில் கிங்ஸ்வே என்பதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) என்பது அடிமைத் தனத்தின் ஒரு அடையாளமாக இருந்தது என்று கூறினார். அதேபோல், கடந்த வாரம் ஐஎன்எஸ் விக்ராந்த் துவக்க நிகழ்வின் போது மோடியினால் வெளியிடப்பட்ட இந்திய கப்பற்படை கொடியில் ஏற்கனவே இருந்த புனித ஜார்ஜின் சிலுவை அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு புதிய சின்னம் சேர்க்கப்பட்டிருந்தது.

பாசிச வன்முறையிலிருந்து விடுதலை கேட்டு அழுகிறது இந்தியா 75

ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி. இந்த ஆகஸ்ட் 13-15க்கான மோடி அரசாங்கத்தின் அழைப்பு இது. இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டில், 'விடுதலையின் அமுதப் பெருவிழா' என்று பெரிதும் விளம்பரப்படுத்தப் பட்ட அதிகாரபூர்வ கொண்டாட்டத்தின் உச்சம் இதுவாகத்தான் இருக்கும்.

இந்திய விடுதலைப் போரின் தியாக மரபை மழுங்கடிக்கும் முயற்சியை முறியடிப்போம்!

இந்திய விடுதலைப் போரின் 75ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ஒன்றிய அரசு இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்காக சில அரசாணைகளை வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 13,14,15 தேதிகளில் நாடெங்கிலும் எல்லார் வீட்டிலும் தேசியக் கொடியை பகலும் இரவும் பறக்க விடலாம் என்று கூறியுள்ளது. அதற்காக மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை தேசியக் கொடியை பறக்கவிடக்கூடாது என்கிற விதியைத் தளர்த்தியுள்ளது. மேலும் கதர் துணிக் கொடிதான் கட்ட வேண்டும் என்பதல்ல, பாலிஸ்டர் துணியில்கூட தேசியக் கொடியை பறக்க விடலாம் என்று கூறியுள்ளது.