தன் பாலின இணையர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பால் புதுமையர் என்றழைக்கப்படும் எல்ஜிபிடிக்யூஐயினரின் உரிமைக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக பால் புதுமையர் சமூகத்தைச் சேர்ந்த 15 இணையர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கில் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

புதிய முப்பெரும் சட்ட மசோதாக்கள்: புதிய மொந்தையில் விஷம் கலந்த பழைய கள்

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860, குற்றவியில் நடைமுறைச் சட்டம் (Cr.PC)1898, இந்திய சாட்சிய சட்டம் (IEA) 1872 ஆகிய முப்பெரும் சட்டங்களும் ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்டவை, அதனால் அவைகள் மாற்றப்பட வேண்டும் என்று காரணம் சொல்லி புதிதாக மூன்று சட்ட மதோதாக்களை கடந்த 11.8.2023 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். ஆங்கிலேயர் காலத்து பழைய சட்டங்களை புதிதாக காலத்திற்கு ஏற்ற சட்டமாக கொண்டு வரவே இந்த புதிய மசோதாக்கள் என்று அமித்ஷாவும் ஆர்எஸ்எஸ் சங்கிகளும் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் தலைவிரித்தாடும் சாதியாதிக்க வெறித் தாக்குதல்கள், படுகொலைகள்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதியாதிக்க வெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாதத்திற்குள் சுமார் 10 கொலைகள் நடந்துள்ளன. தென்காசி மாவட்டத்தில் பஞ்சாயத்து ஊழியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே வைத்து படுகொலை செய்யப்பட்டார். புளியங்குடி தங்கசாமி கைது செய்யப்பட்டு சிறையில் மர்ம மரணமடைந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் முத்தையா என்கிற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் கடந்த ஜூலை 23 அன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இவர் நாடார் சமூகத்தைச் சேரந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

மோடி - ஜோ பைடன் ஜோடி ரகசியம்

ஒரு 12 வயதுடைய சிறுமியை சிலர் நடுரோட்டில் அடித்து உதைத்து சித்தரவதை செய்து கடைசியில் அவர் கண்ணைக் கட்டி, பின்னால் இருந்து சுட்டுக் கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத் தளத்தில் காணப்படுகிறது. அது காண்போரை குலைநடுங்கச் செய்கிறது.

கனியாமூர்-வேங்கை வயல் முதல் அம்பை-உடன்குடி வரை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கையை துரிதமாக எடுப்போம்... இந்த அரசைப் பொறுத்தவரை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே ஓர் அவமானச் சின்னம் என்று கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று ஏப்ரல் 12 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டிலும் வரம்பின்றி தொடரும் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள்

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், ஈழவர்கள், புலையர்கள், தீயர்கள் நடமாடத் தடை விதிக்கப் பட்டிருந்தது. அந்த மக்களை தடைவிதிக்கப் பட்டிருக்கும் தெருக்களில் 1924 மார்ச் 30 அன்று ஊர்வலமாக அழைத்துப் போகப் போவதாக அன்றைய கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி.கேசவ மேனன் அறிவிப்பு வெளியிட்டார். அப் போராட்டத்தைத் துவக்கியவர் வழக்கறிஞராக இருந்த டி.கே.மாதவன். தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று இருந்த காலக் கட்டம் அது. அறிவித்தபடி தொண்டர்களுடன் அணி திரண்டனர். அந்தத் தெருவில் சென்று நின்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மோடியும் மோர்பியும்

குஜராத் மாடல், குஜராத் மாதிரி' என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் பாஜக-சங்கிகளின் முகங்கள் எல்லாம் தொங்கிப் போய் காட்சி தருகின்றன மோர்பி நகரின் மச்சூ ஆற்றின் தொங்குபாலம் அறுந்து விழுந்து 142 பேர் ஆற்றில் மாண்டு போனதால். அப்போதும்கூட இது எதிர்க்கட்சியினர் சதி என்று கூறி சங்கிகள் திசை திருப்பி வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

சொத்து வரி உயர்வும் சமத்துவ நாள் அறிவிப்பும்

சொத்து வரி உயர்வும் சமத்துவ நாள் அறிவிப்பும்
சம்பந்தமில்லாமல் இருக்கலாமா?