அகில இந்திய விவசாயிகள் மகாசபை (AIKM) போராட்டம் வெற்றி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் அம்புக்கோவில் ஊராட்சியில் இயங்கி வந்த நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து விவசாயிகளுடைய நெல்மணிகளை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் அஇவிம சார்பாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது. 14.10.2021 அன்று அம்புக்கோயில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல்மணிகள் கொள்முதல் செய்யப்பட்டது. இது அஇவிம போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். போராட்டத்திற்கு விவசாயிகளும் தோழர்களும் நண்பர்களும் அம்புக்கோயில் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் உறுதுணையாக இருந்தனர்.