ஈரானில் போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து அவர்களோடு நிற்கிறது அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்

ஈரானில் ஆடை நெறிமுறையை மீறினார் என்று 'கலாச்சாரக் காவல்துறையினர்' எடுத்த நடவடிக்கையின் காரணமாக 22 வயது மாஷா அம்னி மரணமடைந்தார். இதை அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் டெக்ரானிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரைக் கைது செய்து, கடந்த செப் 13, 2022 முதல் சிறைப்படுத்தி வைத்திருந்தனர் ஈரானின் ஒழுக்க நெறி காவல்துறையினர். அவரைக் கொடூரமாக அடித்து, ஹிஜாப் பற்றிய நீதியையும் கல்வியையும் கற்றுக் கொடுப்பதற்காக, அவப்புகழ் பெற்ற 'ஒஷாரா' சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். செப் 16, 2022 அன்று அவர் மரணமடைந்துவிட்டார்.

இந்தியாவின் நீதித்துறை ஒரு 'நிர்வாக நீதிமன்றமாக' சுருக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்!

செப்டம்பர் 3 ஆம் தேதி, தீஸ்தா செதால்வத் அகமதாபாத்தின் சபர்மதி சிறையில் இருந்து 68 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிணையில் விடுதலை ஆனார். 2002 குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியதால் அரசியல் ரீதியாக பழிவாங்கும் கைது நடவடிக்கைகளில் ஆர்.பி ஸ்ரீகுமாருடன் கைது செய்யப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். இவரின் முதன்மை பிணை மனு குஜராத் உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது.

‘பில்கிஸ் பானுவோடு நாம்' பில்கிஸ் பானுவுக்கு நீதி கேட்டு போராட்டம்

பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் என்றும் அவருக்கு அநீதி இழைத்த, ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதைக் கண்டித்தும் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு! முற்போக்கு திராவிடத்தின் புதிய கல்விக்கொள்கை!!

தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

பாசிச வன்முறையிலிருந்து விடுதலை கேட்டு அழுகிறது இந்தியா 75

ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி. இந்த ஆகஸ்ட் 13-15க்கான மோடி அரசாங்கத்தின் அழைப்பு இது. இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டில், 'விடுதலையின் அமுதப் பெருவிழா' என்று பெரிதும் விளம்பரப்படுத்தப் பட்ட அதிகாரபூர்வ கொண்டாட்டத்தின் உச்சம் இதுவாகத்தான் இருக்கும்.

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு:

கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள்

கிளாஸ்டன்

காளியப்பன்

* வினிதா

* ரஞ்சித்குமார் தமிழரசன்

செல்வசேகர்

அந்தோணி மணிராஜ்

ஸ்னோயின் கந்தையா ar கார்த்திக்

ஜெயராமன்

சண்முகம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இகை(மாலெ) சார்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போர் நடத்தி மனு அளிக்கப்பட்டது.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.