கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4000 தொழி லாளர்கள் பணி புரிகிறார்கள். கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்தும்கூட அவர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தமுறையிலேயே தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.333 மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஊதிய உயர்வும் வழங்கப் படவில்லை. கொரோனா பொது முடக்க காலத்தில் தங்களின் உயிரைப் பொருட்படுத் தாமல் பணி புரிந்த முன்களப் பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை எதுவும் கொடுக்கப் படவேயில்லை.

தலித்துகள் புத்தமதத்திற்கு மாறுவது கண்டு சங்கிப் படைகள் அஞ்சுவதேன்?

1956, அக்டோபர் 14 அன்று, பாபாசாகேப் அம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களுடன் புத்தமதத்தை தழுவினார். அந்த ஊர் நாக்பூர், அந்த இடம் தீக்ஷாபூமி(மதம் மாறிய மண்) என்று அழைக்கப்படுகிறது, அந்த இடத்தில், டிசம்பர் 18, 2001 அன்று அப்போதைய ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் அவர்களால் ஒரு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இப்போது அது, நாக்பூரிலுள்ள ஒரு பாரம்பரிய கலாச்சார மய்யமாக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. அசோகா விஜய தசமியான இந்த நாள், பேரரசர் அசோகர் கலிங்கப் போரால் ஏற்பட்ட பேரழிவைக்கண்டு மனம் மாறி வன்முறையை துறந்து புத்த மதத்தைத் தழுவியதாக நம்பப்படுகிற நாளை, ஆண்டு தோறும் நினைவுகூரும் நாளாகும்.

புதுச்சேரி ஜிப்மர்: தற்காலிக தொழிலாளரது வெற்றிகரமான போராட்டம்

கடந்த திங்கள் கிழமை தொடங்கிய புதுச்சேரி ஜிப்மர் தற்காலிக ஊழியர்கள் வேலை நிறுத்தம் நான்கு நாட்களுக்குப் பிறகு வியாழனன்று முடிவுக்கு வந்தது. 2200 படுக்கைகள், 5000 ஊழியர்கள், 2000 க்கு மேற்பட்ட மாணவர்கள், பல மாநிலங்களிலிருந்து வந்துள்ள பல்லாயிரக் கணக்கான நோயாளிகளைக் கொண்ட ம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ விருந்த மானுட துயரம் முடிவுக்கு வந்துள்ளது. நான்கு நாட்களாக தங்களது நீதிக்காகப் போராடிய தற்காலிக ஊழியர்களது பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது!

தற்கொலை செய்துகொள்ளும் விவசாய தினக் கூலித் தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய
குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

தற்கொலை செய்துகொள்ளும் விவசாய தினக் கூலித் தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

தோல் மற்றும் தோல் பொருள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் லட்சம் கோடிகள் அரசுக்கு அந்நிய செலவாணி ஈட்டி தந்த புளோரின்ட் ஷூஸ் பிரைவேட் லிமிடெட், புளோ ரின்ட் அப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் இந்தியா அப்பர்ஸ் லிமிடெட் ஆகிய கம்பெனிகள் திவாலாகி விட்டதாக அதன் முதலாளிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, அதில் பணியாற்றிய ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்.

தலையங்கம்

தமிழ்நாட்டு மக்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீறு கொண்டு எழச்சி பெறச் செய்த வஉசி பிறந்தது செப்டம்பர் 5. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17. அவர் வழியில் வந்த அண்ணாதுரை பிறந்தது செப்டம்பர் 15. திமுக உருவானது செப்டம்பர் 16. தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட, தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு தந்த, விடியல் தந்த மாதம் செப்டம்பர். அதே செப்டம்பர்தான் இப்போது இருட்டையும் இடியையும் மின்னலால் அல்ல, மின்சாரத்தால் தரப் போகிறது திமுக அரசு. விடியலுக்குப் பதிலாக இருட்டை தமிழக மக்களுக்கு முப்பெரு விழா பரிசாகத் தந்துள்ளது.

இலங்கையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக சீரழிவுக்கு எதிராகப் போராடிய பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதும் புதிதாகப் பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கம் காவல்துறை மூலம் தாக் குத ல் தொடுத்துள்ளது. ஆகஸ்டு 25 அன்று ஆயிரக்கணக்கான மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் கொழும்பு தெருக்களில் திரண்டார்கள். அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த போராட்டக்காரர்களை கைது செய்ததைக் கண்டித்தும் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரினார்கள்.

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு! முற்போக்கு திராவிடத்தின் புதிய கல்விக்கொள்கை!!

தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.