தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: வெற்று ஆரவார அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.

விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !

ரயில் பயணிகளுக்கு விரதச் சாப்பாடு! 100 நாள் வேலை தொழிலாளிக்குக் காயுது வயிறு! மோடி அரசின் வேதனை!!

பார்ப்பன வழிபாட்டுமுறையின்படி "இரயில் பயணிகளுக்கு வெங்காயம், பூண்டு சேர்க்காத விரதச் சாப்பாடு நவராத்திரியின் போது கொடுக்கப் படப்போவதாக" இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அவர்கள் கவனம் எங்கே இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்திய அரசின் திட்டமிட்ட செயல் பாட்டால், இந்தியாவில் வேலையுறுதிச் சட்ட வேலை அட்டை வைத்திருக்கும் 15.63 கோடி ஏழை குடும்பங் களுக்குச் சாதாரணச் சாப்பாடே பறிபோகிறது. பார்ப்பன இந்துப் பண்பாட்டைக் காப்பாற்றுவதில், அல்லது அதுபோல நடிப்பதில் உள்ள கவனம் சட்டக் கடமையை நிறைவேற்றுவதில் இந்த அரசுக்கு இல்லை.

தற்கொலை செய்துகொள்ளும் விவசாய தினக் கூலித் தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய
குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

தற்கொலை செய்துகொள்ளும் விவசாய தினக் கூலித் தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

காவிரிப் படுகை விவசாயத்தைப் பாதுகாப்பதில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலைப்பாடு என்னவாகஇருக்க வேண்டும்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை, காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட புதிய திட்டங்களை தொடங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள் ளன. ஆனாலும், அதேநேரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் முற்றிலுமாக அகற்றப்பட்டால், அதில் நீண்டகாலமாக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அந்த பகுதியில் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் இணைந்து போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

ஜனவரி 26, 2023 சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி


டில்லியில் ஓராண்டுக்குமேல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது
ஒன்றிய பாஜக மோடி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி SKM சார்பில், இன்று  ஜனவரி 26.1.2023 வியாழன் மாலை  5 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் இருந்து டிராக்டர் பேரணி துவங்கியது.  டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் அணிவகுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)

இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)
23 மாநில நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில 23வது மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இக்க(மாலெ) மாநிலக் கமிட்டி சார்பில் மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் கோ. பழனி தலைமையில் மாநில கமிட்டி ல் உறுப்பினர்கள் எஸ். புருஷோத்தமன், ஆர்.விஜயா, புதுச்சேரி நகரச் செயலாளர் எஸ் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) சார்பாக தோழர் கோ.பழனி மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.

புதுச்சேரி எல் அண்டு டி தொழிலாளர் மறியல் போராட்டம்

ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!
   
கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.