ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPIML கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி கண்டன உரை ஆற்றினார். அ.வி.கி.தொ.ச மற்றும் அ.வி.ம.ச சார்பில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசுகளே!

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் கூலி ரூ.600 உயர்த்திட வேண்டும்.

வீடு, நிலம், வழங்கிட நில சீர்திருத்த சட்டத்தை செயல்படுத்திடு!

55 வயது கடந்த அனைவருக்கும் ஒரு ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்கிடு!

ஜுன் 28, 2022 கடலூர் மாவட்டத்தில் RYA, AIARLA கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜுன் 28, 2022 கடலூர் மாவட்டத்தில் RYA, AIARLA கண்டன ஆர்ப்பாட்டம்…
 
நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி RYA, AIARLA  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தோழர் கிருபா தலைமையில் அண்ணா கிராமம் ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்றது. 

AIARLA மாநில தலைவர் தோழர்.பாலசுந்தரம், மாநில செயலாளர் தோழர்.ராஜசங்கர், CPIML மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர்.பாலசுப்ரமணியன், RYA மாநில செயலாளர் தோழர்.தனவேல் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.