வெகுமக்களிடம் செல்வோம்; வெகுமக்களை வெல்வோம்! (ஜூன் 15-30 பரப்புரை இயக்கத்தை நோக்கி....)

கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 22 அன்று கிளைகள் தோறும் கட்சிக் கொடி ஏற்றுவது, ஏப்ரல் 22 உறுதிமொழி ஏற்பதற்கான அழைப்பை, கட்சி மத்தியக் கமிட்டி விடுத்திருந்தது. கட்சி மாநிலச் செயலாளர், ஆசைத்தம்பி, புதுக்கோட்டை பொறுப்பாளர் பாலசுந்தரம் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டக்கமிட்டிக் கூட்டத்தில், ஏப்ரல் 17 அன்று மத்தியக் கமிட்டி அழைப்பை செயல் படுத்துவது குறித்து விரிவாக திட்டமிடப் பட்டது. கட்சி வேலைகள் உள்ள 7 ஒன்றியங் களில் மொத்தம் 57 கிளைகளில் கட்சிக் கொடியேற்றம் உறுதி மொழி ஏற்பது என்று திட்டமிடப்பட்டது.

அக்டோபர் 18, 2022 உளுந்தூர்பேட்டையில் CPIML ஆர்ப்பாட்டம்...

அக்டோபர் 18, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில் உளுந்தூர்பேட்டை சுங்க சாவடி ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மாநில செயலாளர் தோழர் ராஜசங்கர் விளக்கி பேசினார்.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!
   
கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.

காவிரிப் படுகை விவசாயத்தைப் பாதுகாப்பதில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலைப்பாடு என்னவாகஇருக்க வேண்டும்?

காவிரிப் படுகை விவசாயத்தைப் பாதுகாப்பதில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலைப்பாடு என்னவாகஇருக்க வேண்டும்?
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை, காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட புதிய திட்டங்களை தொடங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள் ளன. ஆனாலும், அதேநேரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் முற்றிலுமாக அகற்றப்பட்டால், அதில் நீண்டகாலமாக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அந்த பகுதியில் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் இணைந்து போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.