வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கத்தின் 3வது ஆண்டு: தொழிலாளர்கள் விவசாயிகள் சென்னையில் பெருந்திரள் அமர்வு

கார்ப்பரேட் ஆதரவு, காவிப் பாசிச மோடி அரசை வீழ்த்த, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய தொழிலாளர் வர்க்கம் விவசாயிகள் சமூகம் நாடு முழுவதும் நவம்பர் 26,27, 28 மூன்று நாட்கள் மாநில தலைநகர்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளை முற்றுகை பெருந்திரள் அமர்வுப் போராட்டம் திட்டமிடப்பட்டது. 

தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் புரட்சிகர மரபை உயர்த்திப் பிடிக்கும் ஏஐசிசிடியுவின் 10 வது மாநில மாநாடு!

2017 டிசம்பரில் ஏஐசிசிடியுவின் ஒன்பதாவது மாநில மாநாடு சென்னை பாடியநல்லூரில் நடைபெற்றது. அதற்குப் பிறகு சவாலான சூழலில் வண்டலூரில் கூடிய பொதுக்குழு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தது. 2020 மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 10வது அகில இந்திய மாநாட்டில் தமிழகத்தின் உரிய பங்களிப்பை புதிய நிர்வாகக் குழு திறம்படச் செய்தது. இந்த இயக்கப் போக்கில் அமைப்பின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் நிலை நிறுத்திக் கொண்டது. 

ஏஐசிசிடியு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் (ஏஐசிசிடியு) சார்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் போராட்ட ஆயத்தக் கூட்டம் 2.10.2023 அன்று நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம், கால முறை ஊதியம் மற்றும் 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரியும் விற்பனையாளர்களின் பிரச்சினையை தீர்க்கக் கோரி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்திடவும் அலுவலக நாட்களில் போராட்டம் நடத்தினால் தான் நமது கோரிக்கையை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படையில் டிசம்பர் 7 அன்று முற்றுகைப் போராட்டம் நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட முதல் மாநாடு

தென்காசி மாவட்ட ஏஐசிசிடியு முதல் மாநாடு தென்காசியில் 1.10.2023 அன்று காலை நடைபெற்றது. சிவில் சப்ளை குடோன் முன்பு உள்ள லோடுமேன் சங்க கொடிக்கம்பத்தில் சங்கத்தின் மூத்த தோழர் ஆர். முருகையா மாநாட்டுக் கொடியேற்றினார். ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகிகள் அயுப்கான், புதியவன் என்ற சுப்பிரமணியன், பேச்சிமுத்து, பொட்டுச்செல்வம், அழகையா, சுப்பிரமணியன், பரமேஸ்வரி ஆகியோர் கொண்ட தலைமை குழு மாநாட்டை வழி நடத்தியது. மாவட்ட நிர்வாகி மாதவன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டைத் துவக்கி வைத்து ஏஐசிசிடியு மாநில பொதுச் செயலாளர் கே.ஞானதேசிகன் சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட பொது செயலாளர் எம்.

புதுச்சேரியில் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் பரப்புரை இயக்கம்

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்களை ஒன்றிய பாஜக அரசு சீர்குலைப்பதை கண்டித்தும் அதற்கு துணை போகும் ரங்கசாமி நமச்சிவாயம் இரட்டை எஞ்சின் ரியல் எஸ்டேட் கூட்டணி ஆட்சியை அம்பலப்படுத்தியும் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் புதுச்சேரி மாநில கமிட்டி சார்பில் பரப்புரை இயக்கம் செப்டம்பர் 6, 7 தேதிகளில் ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. பரப்புரை இயக்கத்தை அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன தேசிய தலைவர் சோ.பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

விண்ணில் பாதி மண்ணில் பாதி

கேள்வி: இந்தியாவில் திட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கான நீண்ட நெடிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அகில இந்திய திட்டத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவதில் நீங்கள் முக்கிய பங்காற்றியுள்ளீர்கள் என்பது மாத்திரம் அல்ல, விடாப்பிடியான போராட்டத்தை வழிநடத்தியும் வருகிறீர்கள். திட்டத் தொழிலா ளர்கள், “தொழிலாளர்” என்று அங்கீகரிப்பதற்குப் பதிலாக அவர்கள் “சேவை வழங்குபவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள். திட்டத் தொழிலா ளர்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் சொல்ல முடியுமா? யாரெல்லாம் திட்டத் தொழிலாளர்கள்?

ஓபிஎஸ் (பழைய ஓய்வூதியத் திட்டம்) வேண்டும்! மாற்றியமைக்கப்பட்ட என்பிஎஸ் (புதிய ஓய்வூதியத் திட்டம்) வேண்டாம்!

கீன்சியனுக்குப் பிந்தைய காலகட்டத்தின் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான ஒரு சர்வரோக நிவாரணியாக உலக மூலதனத்தால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் நவதாராளவாதக் கொள்கை. அந்தக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்ததன் விளைவாக, ஒரு கண்ணியமான ஓய்வூதியத்திற்கான இயக்கம் பெரும் முக்கியத்துவமிக்க ஒன்றாகவும் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதாகவும் மாறியுள்ளது. புதிய தாராளமயக் கொள்கைகளின் அறிமுகத்துடன் மக்கள் நல அரசு என்ற கருத்தின் முடிவு தொடங்கியது. ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டதால் ஓய்வூதிய நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

தோழர்கள் சந்திரகுமார்சந்திரசேகர், சுப்பு தியாகிகள் பெயரால் உறுதி ஏற்போம்! கார்ப்பரேட் காவிப்பாசிசத்தை தோற்கடிப்போம்!!

தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக.. பாட்டாளி வர்க்க விடுதலைக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகப்பெரிய விலை கொடுத்தது வரலாறு. '40 கள் தொடங்கி '60 கள் வரை செங்கொடி ஏந்திய பல தலைவர்கள், தொண்டர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தோழர்கள் வாட்டாக்குடி ரணியன் களப்பால் குப்பு, இன்னும் பலர் நிலவுடைமை ஆதிக்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் உச்சமாக, கீழ் வெண்மணியில் பெண் கள், குழந்தைகள், ஆண்கள் என 44 விவசாயக் கூலிகள் குடிசையில் வைத்து கொளுத்தப் பட்டார்கள்.

ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு நாளில் மோடியை ஆட்சியை வெளியேற்றிட உறுதியேற்ற தொழிலாளர்கள்

அனைத்து மைய தொழிற்சங்கங்களும் இணைந்து திட்டமிட்டிருந்த பெருந்திரள் அமர்வு நிகழ்ச்சிக்கு 2023 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலை முதலே தொழிலாளர்கள் அணி அணியாக வந்து சேரத் துவங்கினர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மிகப்பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை வெற்றி கரமாக்க அனைத்து மைய தொழிற்சங்கங் களும் இணைந்து மாவட்ட மாநாடுகள் நடத்தி மக்களி டையே பிரச்சாரம் மேற்கொண்டு தயார்படுத்தி இருந்தனர்.

ஆஷா திட்டத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டம் தொடர்கிறது!

பீகார் மாநில சுகாதாரத் துறையில், ஆஷா (Accredited Social Health Activist) என்ற பெயரில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பெண்கள் மாநிலம் முழுவதும் பணி செய்து வருகின்றனர். மாதம் வெகுமதி (reward) என்ற பெயரில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆஷா தொழிலாளர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் என்பதற்கு அடையாளமாக அவர்களுக்கு சீருடை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. தொலைதூர குடியிருப்பு பகுதிகளில், மலைப் பிரதேசங்களில் குடியிருப்பவர்களுக்கு மருத்துவ சேவையை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இவர்கள் கருவுற்ற தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஈடுபடுகிறார்கள்.