டெல்லி ஜே என் யூ இடதுசாரி மாணவர் வெற்றி - காவிப் பாசிசத்துக்கு சவால் விடும் வெற்றி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் (ஜேஎன்யூஎஸ்யூ) தேர்தல்களில் ஒன்றுபட்ட இடது கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அகில இந்திய மாணவர் கழகத்தின் (ஏஐஎஸ்ஏ) தோழர் தனஞ்செய் ஜேஎன்யூஎஸ்யூ மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2,598 வாக்குகள் பெற்று 922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எஸ்எஃப்ஐ யின் அபிஜித் கோஸ் துணைத் தலைவராகவும், ஒன்றுபட்ட இடது கூட்டணியின் ஆதரவுடன் பாப்சாவின் ப்ரியான்சி ஆர்யா பொதுச் செயலாளராகவும், ஏஐஎஸ்எப் இன் தோழர் சஜித் இணைச் செயலாளராகவும்  வென்றனர்.  

 

இளையோர் இந்தியா வாக்கெடுப்பு குற்றவாளி கூண்டில் மோடி

'இளையோர் இந்தியா வாக்கெடுப்பு' அகில இந்திய மாணவர் கழகம் அமைப்பால், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த பிரச்சினைகள் மீது, நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங் களில் கடந்த பிப். 7 முதல் பிப். 9 தேதிகள் வரை நடத்தப்பட்ட கருத்து கணிப்பாகும். இந்த வாக்கெடுப்பு 2024 பொதுத் தேர்தலின் வெளிச்சத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டது.

பெண்கள் மீது பிஜேபி தொடுக்கும் போர்

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிக்கும் 20 வயது மாணவியை மூன்று பேர் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்கிற செய்தி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், 2023ம் ஆண்டின் கடைசி நாளில்தான் வெளியே தெரிந்தது. இறுதியாக அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிஜேபி ஐடி செல்லைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பிஜேபி வாரணாசி ஐடி செல்லின் அமைப்பாளர். மற்றொருவர் துணை அமைப்பாளர்.

பள்ளிகளில் சாதியப் பாகுபாடுகள்: கள ஆய்வறிக்கை

சமூக சீர்திருத்த இயக்கங்களின் மாபெரும் பங்களிப்புகளால் மாற்றங்களைக் கண்ட தமிழ் நாட்டில் வெளிப்பட்ட கல்வி நிலையப் பாகு பாடுகள் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின.

பிளேடால் முதுகில் கீறியது, சாதிக் கயிறு பிரச்சினையில் தாக்குதல் மரணம், வீடு புகுந்து தாக்குதல் தடுத்த சகோதரியும் படுகாயம், அம்AAAபேத்கர் படத்தை செல்போன் முகப்புப் படமாக வைத்ததற்கு தாக்குதல், பிற்படுத்தப்பட்ட சாதி யைச் சேர்ந்த பெண்ணுடன் பேசிக் கொண்டு இருந்ததற்கு தாக்குதல்...என கொடூரமான நிகழ்வு கள் அரங்கேறின.

பகத்சிங், அம்பேத்கார் கனவு கண்ட இந்தியாவைக் கட்டி எழுப்ப உறுதியேற்ற அகில இந்திய மாணவர் கழக 10 வது தேசிய மாநாடு!

அகில இந்திய மாணவர் கழகத்தின் 10 வது தேசிய மாநாடு கொல்கத்தா நகரில் 2023 ஆகஸ்ட் 9 முதல் 11 வரை நடைபெற்றது. மாநாட்டு அரங்கம் சந்திரசேகர்-பிரசந்தா பால் நினைவாக வும் மாநாட்டு மேடை ரோகித் வெமுலா - பயல் தட்வி மன்ஞ் நினைவாகவும் பெயர் சூட்டப் பட்டிருந்தது. மாநாடு இளைய இந்தியா கல்வியையும் கவுரவமான வேலையையும் கோருகிறது, வெறுப்பு கும்பலை அல்ல'' என்பதையும் “பகத் சிங் அம்பேத்கர் கனவு கண்ட இந்தியாவை கட்டி எழுப்புவோம்” என்பதையும் முழக்கமாக கொண்டிருந்தது.

புரட்சிகர இளைஞர் கழகம் அகில இந்திய மாணவர் கழகம்

* புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக! 

* மாணவர்கள் நலன் சார்ந்த, சனாதன கொள்கைக்கு எதிரான, பகுத்தறிவு சிந்தனைகள் உள்ளடக்கிய தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்திடு!!

* கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்!

*சுயநிதி கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! *தமிழகத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக!!!

* தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 90% தமிழகத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக!!!

இந்திய கல்வியைச் சிதைத்து மாணவர்களை கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் புதிய கல்விக் கொள்கை

2020 ஜூலை 20ல் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய கல்விக் கொள்கை 2020 ஒன்றிய கல்வி அமைச்சகத் தினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கொள் கையை முதலில் அமல் செய்த இந்திய மாநிலம் கர்நாடகம் ஆகும். ஜூன் 2021ல் உயர் கல்வியில் புதிய' கல்விக்கொள்கையைப் புகுத்துவதாக கர்நாடகம் அறிவித்தது.

தமிழகத்திற்கான தனித்துவமான கல்விக்கொள்கையை நோக்கிய இரண்டு பாதைகள்

அதிமுக-பாஜக பிற்போக்குக் கூட்டணியை வென்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும், தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்' என அறிவிக்கப்பட்டது. 2022 ஜூன் 1 அன்று தமிழக அரசு அரசாணை எண் 98யை வெளியிட்டது.

புரட்சிகர இளைஞர் கழகம்-அகில இந்திய மாணவர் கழகம் நடத்திய இளைஞர்-மாணவர் மாநில சிறப்பு மாநாடு

2023 மார்ச் 31 தோழர் சந்திரசேகர் நினைவு நாள் அன்று மதுரை, நீதிபதி கிருஷ்ணய்யர் சமூக கூடத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பாக மாணவர் இளைஞர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் தனவேல், பாலஅமுதன் தலைமை தாங்கினர். தோழர்கள் பெரோஸ் பாபு, உதுமான் அலி. சேலம் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநாட்டுக் கொடியை தோழர் மங்கையர்கரசி ஏற்றினார். தோழர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் சிறப்புரையாற்றினார்.

AISA - RYA அகில இந்திய மாணவர் கழகம் புரட்சிகர இளைஞர் கழகம் நடத்தும் மாணவர் - இளைஞர் மாநில மாநாடு 31 மார்ச் 2023

மோடியின் பிஜேபி அரசு, கல்வியைத் தனியார் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் கல்வி மாஃபியாக்களுக்கு, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விலை கூவி விற்று வருகிறது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் திறக்கிரோம், வெளிநாட்டுக் கல்வியை இந்தியாவில் வழங்குகிறோம் என்ற பெயரில், மேலை நாடுகளின் கல்வி குப்பைக் கூடமாய் இந்தியக் கல்வி முறை மாற்றப்படுகிறது. மேலை நாடுகளின் தரமற்ற கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்விச் சந்தையில் இடம் அளிக்கப்படுகிறது.